1812
இலங்கை விவிலிய சபை கொழும்பு நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1832
இலங்கையில் கொழும்பு சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
1930
வீரகேசரி நாளிதழ் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் கொழும்பில் தொடங்கப்பட்டது.
1952
இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம் மாறியது.
1990
திராய்க்கேணி படுகொலைகள்: இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் இடத்தில் பெண்கள், முதியவர்கள் உட்பட 47 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1825
பொலிவியா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1861
ஐக்கிய இராச்சியம் லேகோசு நகரை இணைத்துக் கொண்டது.
1862
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க கூட்டமைப்பின் அர்கான்சாசு போர்க்கப்பல் மிசிசிப்பி ஆற்றில் மூழ்கியது.
1870
பிரான்சுடனான இசுப்பிச்செரென், வோர்த் சமர்களில் புருசியா வெற்றி பெற்றது.
1890
நியூயார்க்கில் மின்சாரக் கதிரை மூலம் முதன் முதலாக வில்லியம் கெம்மியர் என்ற கொலைக்குற்றவாளிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1901
ஓக்லகோமாவின் கியோவா நிலம் வெள்ளையினத்தவரின் குடியேற்றத்திற்குத் திறந்து விடப்பட்டது.
1914
முதலாம் உலகப் போர்: ஜேர்மனியின் 10 கடற்படைப் படகுகள் பிரித்தானிய அரச கடற்படையைத் தாக்கவென வட கடல் நோக்கிப் புறப்பட்டன.
1914
முதலாம் உலகப் போர்: செர்பியா ஜேர்மனி மீதும், அவுஸ்திரேலியா ரஸ்சியா மீதும் போரை அறிவித்தன.
1926
கெர்ட்ரூட் எடெர்ல் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1940
எசுத்தோனியாவை சோவியத் ஒன்றியம் இணைத்துக் கொண்டது.
1944
வார்சாவாவில் ஜேர்மனிக்கு எதிராக ஆகஸ்ட் 1 இல் ஆரம்பமான கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. ஏராளமான ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
1945
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் இரோசிமா நகர் மீது அமெரிக்கா “லிட்டில் பாய்” என்ற பெயரைக் கொண்ட அணுகுண்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.
1960
கியூபப் புரட்சி: அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது.
1961
வஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மான் டீட்டோவ் பெற்றார்.
1962
யமேக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1964
அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்ட 4900 ஆண்டு பழமையான புரொமேத்தியசு என்ற மரம் வெட்டப்பட்டது.
1990
வளைகுடாப் போர்: குவைத் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈராக் மீது உலகளாவிய பொருளாதாரத் தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கோரியது.
1991
உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.
1996
செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.
1997
வட கொரிய போயிங் விமானம் ஒன்று குவாமில் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த 254 பேரில் 228 பேர் உயிரிழந்தனர்.
2001
ஏர்வாடி தீ விபத்து: தமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் உயிரிழந்தனர்.
2008
பிரித்தானியாவில் முகமது அப்தல் அசீசு தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி பதவியிழந்தார்.
2010
இந்தியாவில் ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 71 நகரங்கள் பாதிப்படைந்தன. 255 பேர் உயிரிழந்தனர்.
2011
ஆப்கானித்தானில் அமெரிக்க இராணுவ உலங்குவானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில், 30 அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 38 பேர் கொல்லப்பட்டனர்.
2012
நாசாவின் கியூரியோசிட்டி தரையுளவி செவ்வாய்க்கோளில் தரையிறங்கியது.
















