நாடு முழுவதும் நேற்று முன்தினம் (20) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுபானம் உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் போது 21,132 நபர்கள் சோதனை செய்யப்பட்டதுடன் 7,922 வாகனங்கள் மற்றும் 6,545 உந்துருளிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதன்போது 254,679 மில்லிகிராம் ஐஸ், 112,567 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 3,738,356 மில்லிகிராம் கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
அத்துடன் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உட்பட 05 துப்பாக்கிகளையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 18 நபர்கள் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக 321 பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கையில் நாடு முழுவதிலுமிருந்து பொலிஸ் அதிகாரிகள், சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகளின் உறுப்பினர்கள் உட்பட 5,300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
2025 ஏப்ரல் 13 முதல் முழு தீவையும் உள்ளடக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை, குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை இதுவாகும்.










