வவுனியா – பண்டாரிக்குளத்தில் உள்ள வீடு ஒன்றில் தீப்பற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (30.06) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சாமி அறையில் விளக்கு ஏற்றுவதற்காக தேங்காய் எண்ணெயினை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறுதலாக பெற்றோலினை பயன்படுத்தியமையாலேயே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும், குறித்த வீட்டார் இது தொடர்பாக வவுனியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பகுதியினர் பொதுமக்களின் உதவியுடன் தீயினைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை, பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கருதி சாமி அறைக்குள் வைக்கப்பட்டிருந்த பெற்றோலையே மாறி தேங்காய் எண்ணெய் என நினைத்து பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


