• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வருமானத்தை காட்டச் சொல்ல வவுனியா மேயர் யார்? கேள்வி எழுப்பும் எதிர் கட்சி உறுப்பினர் பிறேமதாஸ்

admin by admin
June 23, 2025
in இலங்கை செய்திகள்.
0
வருமானத்தை காட்டச் சொல்ல வவுனியா மேயர் யார்? கேள்வி எழுப்பும் எதிர் கட்சி உறுப்பினர் பிறேமதாஸ்
Share on FacebookShare on Twitter

என்னை வருமானக் கணக்கு காட்டும் படி வவுனியா மேயர் கேட்கிறார். அதை காட்ட நான் தயார். எனது வருமானம் கேட்க இவர் யார்? இவருக்கு இலங்கைக்கே மேயர் என்ற நினைப்பா என வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினர் சி.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் நேற்று மாலை (22.06) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிககையில்,

என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை கூறிக் கொள்வதுடன், மக்களின் உரிமைக் குரலாக நின்று பணியாற்றுவேன் என்பதையும் கூறிக் கொள்கின்றேன். மக்களுடன் மக்களாக இருந்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற என்னை தோல்வியடைந்த 8 பேருடன் சேர்த்து ஆளும் கட்சியில் உள்ள 11 உறுப்பினர்கள் என்னை அரசியலில் வளர விடக் கூடாது என்பதற்காக புதிய சதித்திட்டங்களை தீட்டி பொய் வதந்திகளை பரப்பி என்னை அரசியலில் இருந்து விலகச் செய்வதற்காக பல சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய போலித் தமிழ் தேசிய வாதிகள் என்பவர்கள் யார்? முன்னாள் ஆயுதக் குழுக்கள். தங்களுடன் 15, 20 வருடமாக கூட இருந்தவர்களையே கட்சியில் இருந்து விலக்க முயல்கின்றார்கள். இவர்களுடன் நாம் எவ்வாறு கைகோர்ப்பது? அரசியலில் புதிதாக யாராவது வந்தாலும் கூட அவர்களை வளர விடாமல் தடுக்கின்றார்கள். தமிழ் தேசியம் என்ற போர்வையில் நின்று எமது மக்களின் வாழ்வுரிமையை சிதைத்து நிற்கின்றார்கள்.

இன்று தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தவர் துரோகி என்கின்ற தமிழ் தேசிய வாதிகள் 2009 ஆம் ஆண்டு போரை முன்னின்று நடத்திய சரத் பொன்சேகாவை ஆதரிக்கவில்லையா? அப்போ யார் துரோகி ? மக்கள் தமிழ் தேசியவாதிகளால் வஞ்சிக்கபடுகிறார்கள். இதற்கு முடிவு வேண்டும். சதித் திட்டங்களால் மக்களை அழிவுப் பாதையில் கொண்டு செல்கின்றார்கள். வவுனியா மாநகர மேயர் கூறுகிறார் நாம் மக்கள் சேவைக்காக வந்துள்ளோம் என்று.

யாழ் மண்ணில் தமிழரசுக் கட்சியும் சங்கும் சண்டை, சைக்கிள் ஒத்துப் போகுதில்லை. தமிழரசு தமிழ் மக்களின் இருப்பை தக்க வைக்க ஈபிடிபியுடன் கூட்டு, வவுனியாவில் தமிழினத்தை தக்க வைக்க எல்லோரும் ஒற்றுமை, கிழக்கில் தமிழினத்தை தக்க வைக்க முஸ்லிம் காங்கிரஸ்சுடன் சேர்ந்துள்ளார்கள். ஏன் தமிழ் பேசும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேரக் கூடாது. வடக்கு – கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஏன் ஒன்று சேர முடியாது? அரசியல் செய்வதற்காகவே இப்படி செய்கிறார்கள்.

தமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக என்னை இழிவாகவும் தரக் குறைவாகவும் முகநூலில் தகவல்களை பரப்பி வருகிறார்கள். சாதாரண ஒரு மாநகர சபை ஆட்சிக்கே இப்படி பேசும் இவர்கள் எப்படி நல்லவர்களாக இருக்க முடியும். இவர்கள் மக்களின் சேவைக்காக வரவில்லை. தங்களின் பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் வந்தவர்கள்.

உள்ளூராட்சி தேர்தல் வட்டாரம் தொட்டில் தொடக்கம் சூடுகாடு வரையான வேலையை செய்வதே அதன் வேலை. அதைக் கூட செய்ய விடுகிறார்கள் இல்லை. குடிநீர் வசதியை நான் செய்ய முற்பட்ட போது எமது மேயர் என்னை பழிவாங்கும் நோக்குடன் தடுத்து நிறுத்தியுள்ளார். அதன் பின் தான் பழிவாங்கவில்லை. குடிநீர் சுத்திகரிக்க வேண்டும். அதன் தரச் சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அதே மேயர் முன்னர் நகர சபை உறுப்பினராக இருக்கும் போது இந்த குழாய் கிணறு பழுதடைந்துள்ளது. திருத்துவதற்கு அவர் என்ன நடவடிக்கை எடுத்தார். நகரசபை களஞ்சியசாலையில் குழாய் கிணறு சம்மந்தமான உபகரணங்கள் இருந்தது. ஏன் அவர் சரி செய்ய முயலவில்லை. நாம் பழிவாங்கப்படுகின்றோம்.

இவர்கள் நேர்மையான அரசியல் வாதிகளா?. தமிழ் தேசிய அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்தால் என்னுடன் பேச வாருங்கள் நான் தயார்.

என்னை வருமானக் கணக்கு காட்டும்படி மேயர் கேட்கிறார். அதை காட்ட நான் தயார். எனது வருமானம் கேட்க இவர் யார்? இலங்கைக்கே மேயர் என்ற நினைப்பா இவருக்கு அல்லது ஜனாதிபதி என்று நினைப்பா? ஒரு லட்சத்து 39 ஆயிரத்து ரூபாய்க்கு மின்குமிழ் வாங்கி போட்டுள்ளேன். முடிந்தால் வாங்கோ வருமானம் காட்டுகிறேன். மேயர் முடிந்தால் வருமான பரிசோதகர்களை அனுப்புங்கள். நான் கணக்கு காட்டுகிறேன். தனி மனித அபிவிருத்தயை செய்ய முடியாதவர் தான் மேயர். வாத்தியார் என்பதை தவிர வேற என்ன இருக்கு. ஆசிரியர் என்பது மதிக்க வேண்டியது. ஆனால் அவர் மற்றவரை கேவலமாக நினைக்க கூடாது எனத் தெரிவித்தார்.

Related Posts

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

by Mathavi
June 16, 2026
0

கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போனவரை 5 நாட்களாக தேடி வந்த ஸ்டரஸ்பி தோட்ட தொழிலாளர்கள் இன்று 16 ஆம் திகதி மதியம் 12...

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

by Mathavi
June 16, 2026
0

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'சிசு செரிய' பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (15.06.2026) வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது....

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

by Mathavi
June 16, 2026
0

Manipay Bright sports Club இன் வீரர்களுக்கு இடையில் வருடம்தோறும் இடம்பெறும் BPL எனப்படும் Bright premier league போட்டியானது இவ்வருடமும் 7 ஆவது முறையாக நேற்று...

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

by Mathavi
June 16, 2026
0

இன்று புஸ்சலாவ பிளான்டேஷன் பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தில் உள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொண்டனர். கடந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

by Mathavi
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 16, 2026
0

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொடிவீகும்பூர பகுதியில், நேற்று திங்கட்கிழமை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் நடத்தப்பட்ட முற்றுகையின் போது, பெருந்தொகையான சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர்...

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

by Mathavi
June 16, 2026
0

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கிளிநொச்சி விவசாயிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றலிருந்து மாவட்ட செயலகம்...

ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

by Mathavi
June 16, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இப்...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; மூவர் கைது.!

by Mathavi
June 16, 2026
0

நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினர் முற்றுகையிட்டு, மூன்று சந்தேகநபர்களைக் கைது...

முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்து.!

முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்து.!

by Mathavi
June 16, 2026
0

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா பகுதியில் நேற்று (15) மாலை முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டுநாயக்க விமான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி