மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள மவுஸ்சாகலை தோட்ட சீட்டன் பிரிவில் நேற்று இரவு வீசிய கடும் காற்று காரணமாக மின் கம்பம் ஒன்று சரிந்து வீட்டின் மேல் விழுந்ததுள்ளது.
இச் சம்பவம் நேற்று இரவு 10 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக அப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.
நேற்று இரவு 10 மணிக்கு வீசிய காற்று காரணமாக இரும்பினால் பொருத்தப்பட்ட மின் கம்பம் வீட்டு கூரைக்கு மேல் விழுந்தது உள்ளது.
இதன் போது அந்த வீட்டில் இருந்தவர்கள் எவ்விதமான காயமும் இன்றி உயிர் தப்பி உள்ளதாக அப் பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.
இதன் காரணமாக அப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.


