• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 12, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் ‘சிலப்பதிகார விழா 2025’

admin by admin
May 26, 2025
in இலங்கை செய்திகள்., நிகழ்வுகள்
0
அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் ‘சிலப்பதிகார விழா 2025’
Share on FacebookShare on Twitter

அறம் பிழைத்தால் தண்டிக்கப்படுவோம் என்ற உண்மையைச் சொல்லும் காப்பியங்களை, இந்தத் தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லும் வகையில் சிலப்பதிகார விழாக்களை நடத்தும் அகில இலங்கை இளங்கோ கழகத்தை பாராட்டுவதுடன் இந்தப் பணிகளை தொய்வின்றி எடுத்துச் செல்லவும் அவர்களை வேண்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் ‘சிலப்பதிகார விழா 2025’ துன்னாலை வடிவேலர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. சனிக்கிழமை (24.05.2025) நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றன.

ஆளுநர் தனது தலைமை உரையில், எங்கள் தமிழ் மொழி, பெரும் காப்பியங்களைப்படைத்த கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் ஆகியோரால் புகழ்பெற்றது. ஒவ்வொரு காப்பியங்களும், திருக்குறளும் எங்கள் வாழ்வின் எக்காலத்துக்கும் தேவையான விடயங்களை சொல்லியிருக்கின்றன.

இளங்கோ அடிகளார் அறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சிலப்பதிகாரத்தை படைத்திருக்கின்றார். அறம் என்பதை இன்று பலர் மறந்து செயற்படுகின்றனர். சிலர் அறத்தை தெரிந்திருந்தும் அதன்வழி ஒழுகுவதில்லை.

மனிதன் சந்தோசமாக வாழ்வதற்கே பிறந்தான். அந்தச் சந்தோசம் என்பது பணம், பொருள் சேர்ப்பதில் இல்லை. அறத்தின் வழி நடந்து பிறருக்கு உதவி செய்வதில்தான் உண்மையான சந்தோசம் தங்கியிருக்கின்றது. நாம் உதவி செய்யும்போது எமக்குத் தெரியாமலே பல கரங்கள் எங்களுக்கு உதவி செய்யும். இதுதான் இயற்கையின் நியதி.

சிலப்பதிகாரம் மூன்று முக்கிய விடயங்களை உணர்த்தியிருக்கின்றது.

ஊழ்வினை உறுத்தி வந்து ஊற்றும் என்பது அதில் முதலாவது. நாம் எதைச் செய்கின்றோமோ, எதை விதைக்கின்றோமோ அதுவே எமக்குத் திரும்பக் கிடைக்கும். இது தொடர்பில் நாம் நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றோம். ஆனால், நிச்சயம் ஒரு நாள் இவற்றுக்கு விடைகிடைக்கும்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது இரண்டாவது. இன்றும் அப்படித்தான். அரசியல் செய்வோர் தவறிழைத்தால் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர் என்பது மூன்றாவது. பெண்கள் புறக்கணிக்கப்படும் நிலை இன்றும் இருக்கின்றது. அன்று எப்படி இருந்திருக்கும். ஆனால் பத்தினிப் பெண்களை மற்றையோர் வணங்குவர் என்பது இளங்கோ அடிகளார் சொல்லிச் சென்றிருக்கும் உண்மை.

காப்பியங்கள் எங்களுக்கு வழிகாட்டி. இதனை எடுத்துச் சொல்வதன் மூலம் அவர் சொல்லும் அறக் கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி பின்பற்றச் செய்யவேண்டும். இந்த காப்பியங்கள் – நூல்கள் பற்றி பலருக்குத் தெரியாது. இவ்வாறான விழாக்கள் இதை எடுத்துச் சொல்கின்றன. எனவே அகில இலங்கை கம்பன் கழகமாக இருக்கட்டும், அகில இலங்கை இளங்கோ கழகமாக இருக்கட்டும் அவை இந்தப் பணிகளைத் தொடரவேண்டும், என்றார் ஆளுநர்.

இதனைத் தொடர்ந்து கவியரங்கு, கதாப்பிரசங்கம் மற்றும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையிலான இலக்கிய ஆணைக்குழு என்பனவும் நடைபெற்றன.

Related Posts

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

by selvan
June 12, 2026
0

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக...

வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு

வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு

by selvan
June 12, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவோ எவ்வித...

நாவலப்பிட்டியவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் காயம்!

நாவலப்பிட்டியவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் காயம்!

by selvan
June 12, 2026
0

கண்டி நாவலப்பிட்டிய பிரதேசத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இம்புல்பிட்டிய உச்சியில் உள்ள வீடொன்றின் மீது பாரிய மரம் விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர். இன்று...

வர்த்தக நிலையத்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம்.!

வர்த்தக நிலையத்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம்.!

by Mathavi
June 12, 2026
0

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் காற்று காரணமாக இன்று 12.06.2026 கிளிநொச்சி பரந்தன் பொதுச்சந்தையில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது பாலை மரம் முறிந்து வீழ்ந்தமையால் வர்த்தக நிலையம்...

அநுர அரசால் நாடு வீழ்ச்சிப் பாதையில்.!

அநுர அரசால் நாடு வீழ்ச்சிப் பாதையில்.!

by Mathavi
June 12, 2026
0

தற்போதைய அரசின் செயற்திறனற்ற தன்மையினாலும், அனுபவமின்மையினாலும் நாடு மிக வேகமாக வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நாட்டின்...

கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீரில் மூழ்கி 1,093 பேர் உயிரிழப்பு.!

கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீரில் மூழ்கி 1,093 பேர் உயிரிழப்பு.!

by Mathavi
June 12, 2026
0

இலங்கையில் நடப்பு 2026ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் நீரில் மூழ்கியமையால் 122 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத்...

அரசு மீதான நம்பிக்கை முற்றிலும் பூஜ்ஜியம்; பொய்களாலேயே ஆட்சியை நடத்துகின்றனர்.!

அரசு மீதான நம்பிக்கை முற்றிலும் பூஜ்ஜியம்; பொய்களாலேயே ஆட்சியை நடத்துகின்றனர்.!

by Mathavi
June 12, 2026
0

அரசின் மீதான மக்களின் நம்பிக்கை முற்றிலும் இழக்கப்பட்டு, அவநம்பிக்கையே மேலோங்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு...

சொல்லிசை பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை.!

சொல்லிசை பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை.!

by Mathavi
June 12, 2026
0

பாடகர் சங்கீத்ஷனுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார் என்று பொலிஸார் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்....

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

ஐஸ் போதைப்பொருளுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது.!

by Mathavi
June 12, 2026
0

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக, இன்று (12) காலை ஐஸ் போதைப்பொருளுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு.!

மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு.!

by Mathavi
June 12, 2026
0

மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று (12) வெள்ளிக்கிழமை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி