பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு பதுளை நகரில் வைத்து வாளால் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, பதுளை நகர மையத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் மாலை 4 மணியளவில் சகோதரர் ஒருவர் தனது தம்பியை சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் வாளால் வெட்டியுள்ளார்.
குறித்த வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய நபர் பல வெட்டுக் காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர், வீதியோரத்தில் பலாக்காய் விற்பனை செய்பவர் எனவும் காயமடைந்தவர் தினக்கூலி வேலை செய்பவர் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தாக்குதலை நடத்தியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.