வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 1 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இன்றும் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.