தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மருதங்கேணி பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு இன்று (13) செவ்வாய்க்கிழமை மருதங்கேணி சந்தியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு குளிர் பானம் மற்றும் குளிர்களி வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வானது காலை 10:30 ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற்றது.
நிகழ்வில் வடமராட்சி கிழக்கில் இருந்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வடமராட்சி கிழக்கு மக்கள் சிறுவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
வெசாக் தினத்தை முன்னிட்டு மருதங்கேணி பொலிஸ் தலைமை அலுவல கத்தில் வெசாக் கூடுகள் கட்டப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
