யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் கள்ள மண் கடத்தல் தொடந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;
செம்பியன் பற்று பகுதியில் மக்கள் குடியிருப்புகள் நடுவில் மண் கொள்ளை இடம் பெற்று வருகின்றன முற் காலத்தில் மண் பிட்டி அதிகமாக இருக்கும் பகுதிகளில் மண் எடுத்து வரப்பட்டது தற்போது கிராமப் பகுதியில் அதிகமாக கட்டிடங்கள் வருவதால் மண் அனுமதி கொடுக்காத நிலையில் மக்கள் குடியிருப்புகள் நடுவில் கள்ள மண் கடத்தல் இடம் பெற்று வருகின்றன.
இவ் கடத்தல் கும்பலுக்கு சில குடும்பங்கள் உதவி செய்து வருவதாகவும் அதற்கான காரணம் குடும்பங்களுக்கு தமது சுய தேவைக்காக மண் தேவைப்படுவதே காரணம் என தெரிய வருகிறது.
இவ்வாறே இவ் கள்ள மண் அகழ்வு தொடர்ந்தால் இக் கிராமப்பகுதியில் பாரிய நீர்த்தேக்கம் ஏற்பட்டு மழைக்காலத்தில் உயிர் சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என தெரிய வருகிறது.
இவ் கடத்தல் செயற்பாட்டில் ஓர் தனிப்பட்ட நபரே தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் தொடர்பில் பல முறை பொலிஸ் முறைப்பாடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிய வருகிறது.