தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குஷ் என்ற போதைப்பொருளின் ஒரு தொகுதியை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சிறப்பு சோதனையின் போது, இன்று (12) மதியம் நாட்டிற்கு வந்த பிறகு சுங்க வளாகத்தின் வழியாக செல்ல முயன்ற போது, தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது அவரிடம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 46 கிலோகிராம் என்றும், அதன் மதிப்பு 460 மில்லியன் ரூபாய்க்கு இருக்கும் என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபரையும், போதைப்பொருள் பொதியையும் மேலதிக விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.