யாழ்ப்பாணத்தை தலைமையாக கொண்ட தன்னார்வ இளைஞர் அமைப்பான சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இக் கடிதத்தில் குறிப்பிடப்படுவது யாதெனில்,
கொழும்பு இராமநாதன் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற மாணவி 29/4/2025 அன்று ஐந்தாம் மாடியில் இருந்து கீழே விழுந்து தன் உயிரை மாய்த்து கொண்ட சிறுமியான டில்கி அம்ஷிகாவுக்கு ஏற்பட்ட வன் கொடுமைக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மற்றும் சிறுவர்கள் பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகள் தொடர்பான சட்டங்கள் கடுமையானதாக மாற்றப்பட வேண்டும் எனவும் ஓர் அவசர கோரிக்கைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
