போதைவஸ்து பாவித்ததன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய குடும்பஸ்தரே நேற்று வெள்ளிக்கிழமை மாலை இவ்வாறு சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் இன்று சனிக்கிழமை கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணை மேற்கொள்ளவுள்ளார்.
ADVERTISEMENT