பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியை பாதியிலேயே நிறுத்தி விட்டு, மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.
இதற்கிடையில், பஹல்காம் தாக்குதலுடன் தொடங்கிய இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரமடைந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் ஏற்பாட்டாளர்கள், அதை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க இன்று முடிவு செய்தனர்.
ADVERTISEMENT