• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

நாளை ஐதராபாத்தில் 72வது உலக அழகி போட்டி இறுதிச்சுற்று

Sangeetha by Sangeetha
May 30, 2025
in இந்திய செய்திகள், உலக செய்திகள்
0 0
0
நாளை ஐதராபாத்தில் 72வது உலக அழகி போட்டி இறுதிச்சுற்று
Share on FacebookShare on Twitter

72-வது ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டி இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் மே 10-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு படையெடுத்து வந்துள்ளார்கள்.

இந்த போட்டியில் இந்தியா சார்பில் நந்தினி குப்தா கலந்து கொள்கிறார். இங்கிலாந்து சார்பில் பங்கேற்ற மில்லா மாகி என்ற அழகி, உடல்நலக்குறைவு காரணமாக போட்டியில் இருந்து விலகினார். அவரை போட்டி அமைப்பாளர்கள் சொந்த ஊர் அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சென்ற பிறகு போட்டி ஏற்பாட்டாளர்கள் தன்னை கண்ணியமாக நடத்தவில்லை என்று குற்றம்சாட்டினார். பாலியல் தொழிலாளி போல தன்னை நடத்த முயற்சித்ததாகவும் பகீர் தகவல்களை தெரிவித்தார்.

இதனால் உலக அழகிப்போட்டி சர்ச்சையில் சிக்கியது. அவரது புகாரை போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுத்தனர். இருந்தபோதிலும் இங்கிலாந்து அழகியின் புகார் குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டு உள்ளது.

மில்லா மாகி விலகிய நிலையில், இங்கிலாந்து சார்பில் மற்றொரு அழகி போட்டியில் பங்கேற்றார். முன்னதாக தெலுங்கானாவில் உள்ள பாரம்பரிய கோவில்களுக்கு அழகிகள் சென்று தரிசனம் செய்து வழிபட்டனர்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் அழகிகளுக்கு இடையே விளையாட்டு, தனித்திறமை, நடனப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இதில் 14 பேர் கால்இறுதிப்போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். தனித்திறன் போட்டியில் இந்தோனேசிய அழகி மோனிகா கேசியாவும், நடனப்போட்டியில் இந்திய அழகி நந்தினி குப்தாவும் முதலிடம் பெற்றனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள 200 சிறுவர், சிறுமிகளுடன் ஆஸ்கார் விருது பெற்ற ‘ நாட்டு நாட்டு’ பாடலுக்கு அழகிகள் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் சிறுவர், சிறுமிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஆதரவற்றோருடன் நடனம் ஆடிய நந்தினி குப்தா சிறுமிகளிடம் கூறுகையில், ‘நீங்கள் ஆதரவற்றோர் இல்லை. நாங்களும் உங்கள் குடும்பம்தான்’ என்று கூறினார்.

இந்த நிலையில், 72-வது உலக அழகி போட்டிக்கான இறுதிச்சுற்று நாளை (சனிக்கிழமை ) மாலை 5.30 மணிக்கு ஐதராபாத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசும், உலக அழகி போட்டி ஏற்பாட்டாளர்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி