• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 31, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வாசகர் பக்கம்

நான் ஸ்ரீலங்கன் இல்லை..!

Thamil by Thamil
May 9, 2025
in வாசகர் பக்கம்
0 0
0
நான் ஸ்ரீலங்கன் இல்லை..!
Share on FacebookShare on Twitter

தீபச்செல்வன் என்ற புனைப்பெயர் கொண்ட அண்ணன் பிரதீபன் ஈழ தேசத்தில் தவிர்க்கவும் மறுக்கவும் முடியாத எழுத்தாளராவார். ஈழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த அண்ணன் தீபச்செல்வனின் எழுத்துக்கள் தூங்கும் தமிழர் மனங்களை தட்டி எழுப்பி சிந்திக்கவும் செயல்படவும் வைக்கிறது.

எழுத்துக்களை ஆயுதமாக்கும் அண்ணனின் சிந்தனை ஓட்டம் விடுதலை போராட்ட காலத்திலிருந்து தொடர்கிறது. தமிழரின் விடுதலையை ஆழமாக சுவாசிக்கும் போக்கிலேயே அண்ணனின் கவிதைகள் பறை சாற்றுகிறது. உலகின் இனப் பரம்பலில் ஏற்படும் விடுதலை போராட்ட பெரும் மூச்சுக்கள் பலவற்றின் எடுத்துகாட்டுக்களையும் ஆதாரங்களையும் முன்னிலைப்படுத்தி ஈழத்தின் ஏக்கத்தினை தெளிவுபடுத்துகிறார் எழுத்தாளர் தீபச்செல்வன்.

ஈழதேச விடுதலைக்கான போராட்டத்தின் அத்தனை வலிகளையும் கனவுகளையும் உயிர்த்தியாகங்களையும் மூன்றே வரிகளில் வரைந்து எம்மை வாயடைக்க வைத்துள்ளார் அண்ணன் தீபச்செல்வன்.

ADVERTISEMENT

ஈமத்தாழி என்ற தலைப்பில் அமைந்த கவிதைகளுள் என்னை அதிகமாக புரட்டி போட்ட வரிகள் பின்வருமாறு,

“சிதைக்கப்பட்ட கல்லறையை சுற்றித் திரியும்
தாயொருத்தி சிந்தும் ஒரு துளி கண்ணீர்
இரண்டாய் பிரித்து விடுமா இத் தீவை “

காஸா நகர் குழந்தைகள் எனும் தலைப்பில்

“அவர்கள் ஏன் குழந்தைகள் மீது
குண்டுகளை வீசுகிறார்கள்?
தமது துப்பாக்கிகளை
ஏன் குழந்தைகளுக்கு எதிராய்
திருப்புகிறார்கள்?

ஒவ்வொரு பாலஸ்தீனரின் கைகளிலும்
ஒரு குழந்தையின் பிணம்

குழந்தைகளற்ற
குழந்தைகள் பதுங்கியிருக்கும்
ஓர் நகரை எப்படி அழைப்பது?

ஓர் ஈழக் குழந்தையை
கருவில் கரைத்துக் கொல்லும்போது
பாலஸ்தீனக் குழந்தை ஒன்றை
குண்டுகள் தின்று போட்டிருக்கின்றன

குழந்தையைக் கொல்பவர்களின் நோக்கம்
என்னவாய் இருக்கும்?”

உனக்காக கொந்தளிப்பேன் எனும் தலைப்பில்

“என் கோவில்களையும்
உன் பள்ளிவாசல்களையும் இடிப்பது ஏன்?
கடவுள்களையும் கொலை செய்யும் நிலத்திலிருந்து
உனக்காய் பிரார்த்திக்கும் நானறிவேன்
கைவிடப்படுதலின் துயரத்தை

என்னிடம் தொப்பி இல்லை
நீயோ திருநீறு அணிந்திருக்கவில்லை
ஆனாலும் நமது இரத்தம் உறிஞ்சப்படுகிறது
வெறியோடு அலையும் விலங்குகளின் கண்களுக்கு
உறிஞ்சப்படும் குருதி வேறு வேறல்ல “

பயங்கரவாதி எனும் தலைப்பில்

“பனை மரங்களைப் பிடுங்கி
கித்துல் மரங்களை விதைப்பாய்
என் பூர்வீக வீடுகளைச் சிதைத்து
இராணுவ முகாம்களை எழுப்பி
எனை பயங்கரவாதி என்பாய்

ஆலமரங்களை வீழ்த்தி
வெள்ளரச மரங்களை நடுவாய்
என் ஆதிச்சிவனை விரட்டி
புத்தரைக் குடியேற்றி
எனை பயங்கரவாதி
என்பாய்

எனது நிலங்களை அபகரித்து
உனது பெயர்களைச் சூட்டுவாய்
எல்லைகளை மெல்ல மெல்ல அரித்துண்டு
எனது தேச வரைபடத்தை
வரையுமென் கைகளுக்கு விலங்கிட்டு
எனை பயங்கரவாதி என்பாய்

ஆம், சிங்கள தோழனே!
குழந்தைகளின் நிலத்தைக் காப்பவன்
பயங்கரவாதி எனில்
குழந்தைகளின் பூக்களைச் சேமிப்பவன்
பயங்கரவாதி எனில்
நான் பயங்கரவாதிதான்
இது பயங்கரவாதிகளின் பூமிதான்.”

எழுத்துக்களால் விடுதலையை விடிய வைக்க துடிக்கும் அண்ணனின் எழுத்தின் மீதான காதலும் இனத்தின் மீதான பற்றும் விடுதலை வேட்க்கையும் ஒரு போதும் ஓயப் போவதுமில்லை,ஓயவும் கூடாது. எழுத்துக்களால் தமிழினத்தை உலகம் முழுவதும் கொண்டு போய்ச் சேர்த்தும் மற்றும் ஒரு விடுதலைக்கான இளைஞரின் போராட்ட வரலாற்றினை தத்துரூபமாக எடுத்துரைக்கும் ஆற்றலும் அண்ணன் நூல்களில் காணலாம். சிங்கள மக்கள் வரை தனது இனத்தின் நூற்றாண்டுகால வலியினை எழுத்துக்கள் மூலம் மொழிபெயர்ப்பு செய்து உணரச் செய்கிற தீபச்செல்வன் அண்ணனின் எண்ணங்கள் தொடர்ந்து பரந்து பாய வேண்டும்.

நூல் :-நான் ஸ்ரீலங்கன் இல்லை
நூல் ஆசிரியர் :-தீபச்செல்வன் (பிரதீபன் )
விலை :-900 ரூபாய்

எழுத்தாளர்
விமர்சகர்
-ஆதன் குணா –

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 2 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 3 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Thamil

      Thamil

      Related Posts

      நான் இந்து அல்ல, நீங்கள்..!

      நான் இந்து அல்ல, நீங்கள்..!

      by Thamil
      May 23, 2025
      0

      நூல் :- நான் இந்து அல்ல, நீங்கள்எழுத்தாளர் :- தொ. பரமசிவம்விலை :- ரூபா. 50 உலகமயமாக்கல் என்ற பேரில் பன்னாட்டு மூலதனம் தருகின்ற நெருக்கடியில் எளிய...

      ஆகாயத்துக்கு அடுத்த வீடு..!

      ஆகாயத்துக்கு அடுத்த வீடு..!

      by Thamil
      May 16, 2025
      0

      நூல் :- ஆகாயத்துக்கு அடுத்த வீடுஎழுத்தாளர் :- மு. மேத்தாவிலை :-800 ரூபாய் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிதை நூலை கைகளில் ஏந்தினேன். நூலின் முதல்...

      உணர்வுகளின் சங்கமம்..!

      உணர்வுகளின் சங்கமம்..!

      by Thamil
      May 9, 2025
      0

      சிறுவயதிலிருந்து தாயின் அன்பினையும் அரவணைப்பினையும் அள்ளிப் பருகிய ஆண் பிள்ளைகளில் அரியநாயகமும் ஒருவராவார். தமிழின் தொன்மை நூல்களினை ஆங்காங்கே கிடைக்கின்ற நேரத்தில் படித்து கதையாக, பாடலாக தாய்...

      நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்

      நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்

      by Mathavi
      April 26, 2025
      0

      விளக்கவுரைஎழுத்தாளர். ஆதன் குணா என்னுடைய முதல் எழுத்துரு பதிப்பானது கவிதையில் இருந்தே தொடங்குகிறது. சிறு சிறு துளிகளாக வடித்து இந்த கவிதை நூலினை சிற்பமாக வடித்துள்ளேன். நீண்ட...

      சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல்

      சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல்

      by Mathavi
      April 20, 2025
      0

      சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல் புதிய அகவையில் தடம் பதிக்கும் ரவூப் ஹக்கீம் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களில் சமகாலத்தில் பாராட்டுவதாக இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும் அதிகமாக உச்சரிக்கப்படும்...

      மூன்றாவது கண்

      மூன்றாவது கண்

      by Mathavi
      April 18, 2025
      0

      கவிஞர் இரா. மேரியனின் படைப்புகளில் ஒன்றான "மூன்றாவது கண் " கவிதை நூலினை வாசிக்க வாசிக்க கவிதைகளில் இன்பம், புத்துணர்ச்சியின் ஈடுபாடு அதிகமாக தென்படுகிறது. மரபணுவில் கவிதைத்...

      குமுதாவின் கதை… பாகம் = 01

      குமுதாவின் கதை… பாகம் = 01

      by Mathavi
      April 10, 2025
      0

      அஹா என்ன ஒரு அதிசயம் எங்கு பார்த்தாலும் பச்சை பசலையாக காட்சியளிக்கும் இயற்கை. வண்ண வண்ண பூக்களில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சிகள், பறவைகளின் கீச்சிடும் சத்தம்...

      என்னைத் தேடுகிறேன்

      என்னைத் தேடுகிறேன்

      by Mathavi
      April 10, 2025
      0

      கிணற்றடித் தென்னையின் கீழ்தென்னோலைத் துண்டொன்றைஎடுத்துப் போட்டுதென்னை நிழலையும்கடந்து வரும்பனித் துளிகளைஉடலில் சுமந்துதூங்கிய இரவுகள் அடுத்த கிணற்றடிகளின்நீர் இயந்திரங்களின் சத்தம்தாலாட்டாகத் தூங்க வைக்கஅடிக்கடி விழித்துமீண்டும் கண்களைஇறுக மூடித்தூங்கும் முயற்சிகள்...

      சென்னை விமான நிலையத்தின் அவலநிலை- சுற்றுளா பயணிகள் பெரும் அவதி!

      சென்னை விமான நிலையத்தின் அவலநிலை- சுற்றுளா பயணிகள் பெரும் அவதி!

      by Bharathy
      April 8, 2025
      0

      சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு மாத்திரம் இலவச (Wifi) வழங்குவதாகவும் வெளிநாட்டவர்களுக்கு இவ் வசதிகள் இல்லையெனவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.சென்னை விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர்களின்...

      Load More
      Next Post
      கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் ; சி.ஐ.டிக்கு விஜயம் செய்த சிவானந்த ராஜா..!

      கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் ; சி.ஐ.டிக்கு விஜயம் செய்த சிவானந்த ராஜா..!

      யாழில் எரிந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் மேற்கூரை..!

      யாழில் எரிந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் மேற்கூரை..!

      காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனைத்து பி.எஸ்.எல் போட்டிகள்..!

      காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனைத்து பி.எஸ்.எல் போட்டிகள்..!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி