• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வாசகர் பக்கம்

ஆகாயத்துக்கு அடுத்த வீடு..!

Thamil by Thamil
June 16, 2025
in வாசகர் பக்கம்
0
ஆகாயத்துக்கு அடுத்த வீடு..!
Share on FacebookShare on Twitter

நூல் :- ஆகாயத்துக்கு அடுத்த வீடு
எழுத்தாளர் :- மு. மேத்தா
விலை :-800 ரூபாய்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிதை நூலை கைகளில் ஏந்தினேன். நூலின் முதல் பக்கம் புரட்டும் போது முதல் பதிப்பு 2004ஆம் ஆண்டு செய்யப்பட்டாலும் 2021ஆம் ஆண்டு வரை பத்து தடவைகளுக்கு மேல் மீள் பதிப்பும் செய்யப்பட்டே வந்துள்ளது. மு.மேத்தா அவர்களின் கவிதைகள் காலம் கடந்தும் தனி மரமாய் நிற்கும் ஆற்றல் கொண்டது.

மேத்தாவின் கவிதைகள் ரசனைகளில் மிதம் மிஞ்சி எம்மை உள்ளீர்க்க கூடியது. சமூக அவலங்கள் அவரது கண்களை உலுக்கி கைகளை எழுதவும் வைத்துள்ளது. கவிதை நூலினுடைய தலைப்பு வேறு ஒரு கோணத்தில் பார்க்கவும் என்றும் சொல்லித் தருகிறது. மேத்தாவின் வரிகளில் மூழ்கி கிடப்பதும் முழுமையான மன நிம்மதியைத் தருகிறது. தமிழை தமிழால் வாழ்த்தி வாழ வைக்கிறார் கவிஞர் மேத்தா.

வழுவமைதி எனும் தலைப்பில்

“வசதி உள்ளவர்
வழுக்கி விழுந்தால்
குளியல் அறை என்று
கூறுக.
பஞ்சை பராரிகள்
வழுக்கி விழுந்தால்…
படுக்கை அறை என்று
பகர்க “

வாழ்க்கை என்பது… எனும் தலைப்பில்

“பெட்டி படுக்கைகளைச்
சுமந்தபடி
ஒரு
பிராயணம்

எப்போது சுமைகளை
இறக்கி வைக்கிறோமோ
அப்போது
சுற்றியிருப்பவர்கள்
நம்மைச்
சுமக்கத்
தொடங்குகிறார்கள்….”

வரலாறு எனும் தலைப்பில்

“அடையாளங்களையெல்லாம்
அழித்து விடுகிறார்கள்!

எப்படி அறிந்து கொள்வது…
கொலைகாரர் குரலையும்
குயில்களின் இசையையும்?”

குடியரசு தினம் எனும் தலைப்பில்

“ஆளுநர் மாளிகையில்
விருந்து
அனைத்துக் கட்சித்
தலைவர்களுக்கும்!

பரிமாறிக் கொண்டிருந்த
பணியாளர்கள் தமக்குள்
பேசிக் கொண்டனர்

யார்
யாரைச்
சாப்பிடப் போகிறார்களோ?”

கொம்பு எனும் தலைப்பில்

“முளைத்துவிடுகிறது
மாடுகளைப் போல்
தலையாட்டும்
மனிதர்களுக்கும்!”

ஈராக் – 2003 எனும் தலைப்பில்

“ஈராக் அழிந்து
சிதைந்த பிறகுதான்
தெரிந்தது
பேரழிவு ஆயுதங்கள்
எவர் கையில்
இருந்ததென்பது “

தீண்டாமை எனும் தலைப்பில்

“கறுத்தநிறப் பாம்பொன்று
மேனி கொஞ்சம்
கலை எழிலாய்ச் சிவந்தநிறப்
பாம்பு ஒன்று
பொறுத்திருந்தே அறைக்குள்ளே
நுழைந்து சுற்றிப்
புறம்பார்த்தும் அகம்பார்த்தும்
புன்ன கைக்கும் “

வெற்றித் தூண் எனும் தலைப்பில்

“மகளிர் கூட்டம்
வரவேற்பளித்தது
மலர்களைத் தூவி

எதிரி நாட்டுப் பெண்களை
விதவைகளாக்கி வந்த
வீரர்களுக்கு “

கவிதையின் ஆழத்திற்க்கு வாசகர்களை அடித்து இழுத்துச் செல்வதாகவே ஆகாயத்துக்கு அடுத்த வீடு நூலைப் பார்க்கிறேன்.

எழுத்தாளர்
விமர்சகர்
-ஆதன் குணா –

Related Posts

குருந்தூர் மலை: வரலாற்றுத் திரிபும் ஆக்கிரமிப்பு அரசியலும்

குருந்தூர் மலை: வரலாற்றுத் திரிபும் ஆக்கிரமிப்பு அரசியலும்

by Mathavi
April 16, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள குருந்தூர் மலை தொடர்பான தொல்லியல் மற்றும் வரலாற்று விவகாரம், வெறும் மத அடையாளமாக மட்டுமன்றி, ஒரு தேசிய இனத்தின் பூர்வீக அடையாளச் சிக்கலாகவும்...

தமிழ்ப் பெயர்கள்!

தமிழ்ப் பெயர்கள்!

by Thamil
November 7, 2025
0

சிறிதளவேனும் வேற்று மொழிகளின் கலப்படமின்றி ஆரம்பகால தமிழர்கள் தமது குழந்தைச் செல்வங்களுக்கு ஆகச் செறிந்த கருத்து பொதிந்த தமிழ்ப் பெயர்களை வைத்தார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்பு கிராமங்களில்...

வாசலிலே கிருசாந்தி!

வாசலிலே கிருசாந்தி!

by Thamil
November 1, 2025
0

எழுபது ஆண்டு கால தாகத்தில் எண்ணற்ற அழிவுகளும், சிதைவுகளும் தமிழினத்தின் மேல் இறங்கிக் கொண்டே இருக்கிறது. வெள்ளைக்காரர்களிடம் பெற்ற சுதந்திரம் தமிழர்களுக்கு மட்டும் நஞ்சாக மாறியது ஏனோ....

பாகல் துளிர்!

பாகல் துளிர்!

by Thamil
October 18, 2025
0

முதன் முதலில் எனது கவிதை ஒன்று நூலுருவாக்கம் கண்டது எனது பாடசாலை மூலமாகவேதான். முதலாம் ஆண்டு தொடக்கம் பதினொராம் ஆண்டு வரை கற்று ஆரம்பக் கல்வியை பூர்த்தி...

அகராதி கவிதைகள்!

அகராதி கவிதைகள்!

by Thamil
October 10, 2025
0

ஒரு சில சொற்களை கொண்டு கருத்தின் தொன்மைக்கு அழைக்கும் கவிதை பாணி தனிப்பட்ட அளவில் எனக்கு அதிகம் பிடிக்கும். சொற்களை, கருத்துக்களை அடுக்காமல் ஒரே புள்ளியில் நெத்தியடியாக...

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்!

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்!

by Thamil
September 27, 2025
0

வெறுமனே வார்த்தையோடு முடிகின்ற சொற்பதமாக இல்லாது பெரும் உயிரோட்டமாக இறுக்கப்பற்றுகிற நாமமாகவே ஈழத்தமிழர்களின் பார்வையில் தமிழ்த் தேசியம் விளங்குகிறது. தமிழ்த் தேசியம் என்பது வெள்ளையர்களின் வெளியேறுகைக்கு பிறகு...

தமிழ்த் தேசியமும் குறுநலப் பித்தும்!

தமிழ்த் தேசியமும் குறுநலப் பித்தும்!

by Thamil
September 19, 2025
0

இந்நூலினுடைய தலைப்பானது மிக ஆழமானது என்பதனை பார்த்தவுடனேயே தெரிந்து கொள்ளமுடிகிறது. ஈழத்து தமிழர்களுடைய அரசியல் விடுதலை என்பது தமிழ்த் தேசியம் என்பதாகும். இந்தத் தமிழ்த் தேசியம் என்ற...

பால காண்டம்!

பால காண்டம்!

by Mathavi
September 13, 2025
0

அண்ணன் முத்துக்குமார் அவர்கள் மண்ணை விட்டு பிரிந்தாலும் எவரின் உள்ளத்தை விட்டும் இன்றும் பிரியவில்லை. அவர் கவிதை மேல் கொண்டுள்ள காதல் காலத்தை வென்று ஓங்கி ஒலித்துக்...

தோட்டுப்பாய் மூத்தம்மா!

தோட்டுப்பாய் மூத்தம்மா!

by Thamil
September 5, 2025
0

நூல் :- தோட்டுப்பாய் மூத்தம்மாஎழுத்தாளர் :- பாலமுனை பாறுக்விலை :- 200ரூபா ஐயா பாலமுனை பாறுக் பற்றி அறியாதவர் எவரும் இருக்க முடியாது என நினைக்குறேன். ஈழத்து...

புலரி..!

புலரி..!

by Mathavi
August 23, 2025
0

நூல்:- புலரிஎழுத்தாளர்:- கல்யாண்ஜிவிலை:- ரூபாய். 450 தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் 1946ஆம் ஆண்டு தாயின் கருவில் இருந்து பூமித்தாயின் கரங்களுக்கு பிண்டமாக பிதுங்கிய அசையாத உருவமே சில...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி