• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 1, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வாசகர் பக்கம்

உணர்வுகளின் சங்கமம்..!

Thamil by Thamil
May 9, 2025
in வாசகர் பக்கம்
0 0
0
உணர்வுகளின் சங்கமம்..!
Share on FacebookShare on Twitter

சிறுவயதிலிருந்து தாயின் அன்பினையும் அரவணைப்பினையும் அள்ளிப் பருகிய ஆண் பிள்ளைகளில் அரியநாயகமும் ஒருவராவார். தமிழின் தொன்மை நூல்களினை ஆங்காங்கே கிடைக்கின்ற நேரத்தில் படித்து கதையாக, பாடலாக தாய் வெளிப்படுத்துவதை தன்னுள் சிறுவயது முதல் ஈர்த்த கவிஞர் பிற்ப்பட்டகாலத்தில் கவிதைகளை வடிவமைத்தார்.

தனது பதினைந்து வயது முதல் கவிதை எழுதத் தொடங்கிய சிறுவன் அரியநாயகம். சிறுவயதுக் கவிதைகள் அவ்வப்போது பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டு வெளிவந்ததும் உள்ளது. சிறுவயதில் தொடங்கிய கவி ஆர்வம் இன்றும் கவிமழை பொழியச் செய்கிறது. அன்பு, மங்கை, தாய்மை, காதல், இயற்கை போன்ற பல விடயங்களை கவிதைகளில் பட்டை தீட்டுகிறார்.

இறைவணக்கம்

ADVERTISEMENT

“பல்பெரும் சமயம் கூறும்
பரம் பொருள் ஆகி நின்று
நல் இறை சக்தியாக
நலம் தரும் இறைவனாக
கல் மனம் கொண்ட மாந்தர்
தம் மனம் கனிந்திடவும்
சொல்வளம் கொண்ட தூய
இறைவனே தொடர்ந்து வந்து
வல்ல நின் வார்த்தையாலே
வளம் பெறு கவிதையாக்கி
அல்லவை அகற்றி நல்ல
அமுதமாம் கருத்தை வைத்தென்
இல்லத்தில் உறைந்து எந்தன்
இதயத்தில் நிறைந்து நின்று
வெல்லத்தில் கலந்த தேன் போல்
வளம் மிகு சொற்கள் சேர்ப்பாய்”

நற்றமிழ் பூங்கா எனும் தலைப்பில்

“அன்பு என்னும் நறுமணம் வீசி
ஆற்றல் என்னும் கொடிதனில் படர்ந்து
இன்பம் என்னும் பொய்கையில் நம்மை
ஈர்க்கும் தன்மை கொண்ட மலர்கள்
உம்பர் உலக வானவர் தானும்
ஊக்கம் கொள்ளும் ஆக்கமுடைய
எங்கும் மலரும் எழில்மிகு செடிகள்
ஏற்றங்கொள்ள இங்கே அளிக்கும்
ஐயம் தீரும் ஆழ்ந்த கருத்து
ஒருங்கே படைக்கும் ஒரே நற் பூங்கா
ஓங்கி வளர்ந்த மரங்கள் அடர்ந்த
ஓளவை தந்த அரிய கருத்தில்
அதே மனதில் ஆழமாய்க் கொண்டு
ஆக்கித் தந்தேன் நற்றமிழ் பூங்கா “

விதி வென்றது எனும் தலைப்பில்

“அன்றில் பறவைகள் ஒன்றாய் இருந்தன
அகமதில் மகிழ்ந்தன இணைந்தன நன்றாய்
இன்று நல்வேட்டை என்றவோர் வேடனும்
இணைத்தனன் அம்பினை அன்றிலுக் கெய்யவே
நன்றென நினைத்த நல் நாகமதொன்று
நாணேற்றும் வேடனின் கால்களை நாடிற்று
என்னென்று பார்க்கக் காலை இழுத்தனன்
இலக்குத் தவறி எயிறது சென்று
அன்றில் மேல் கண்ணாய் இருந்த பருந்தை
அடித்து கொன்றது அன்றில்கள் தப்பின
துன்புற நினைத்த வேடனும் துவண்டான்
துணையுடன் அன்றில் தூரச் சென்றது “

காதல் எனும் தலைப்பில்

“அழகிய மங்கை அருகினில் வந்தாள்
பழகிய உடனே பருவத்தால் கவர்ந்தாள்
குழலது கருமை குரலது இனிமை
மொழியது என்னைக் கவர்கின்ற தன்மை

இனிதென நினைத்து இதழது நெருங்க
மனையாளின் எண்ணம் மனதினில் தோன்ற
கனிந்திட்ட காதல் அகன்ற தக்கன்னிக்
கனியும் அழுகிய பழமாய் காண்பாள்

வெறுத்தது உள்ளம் வெந்தது உடலம்
கறுத்தது முகமும் கலுழ்ந்தன கண்கள்
மறுத்தது இனிமேல் மங்கையர் தன்னை
பொறுத்திருப்பேன் ஓர் பொன் நாள் அணுகவே
அந்தநாள் வந்தது அழகிய மனையாள்
புன்னகை புரிந்தாள் போகமும் செய்தாள்
இந்நாள் வரைக்கும் எனக்கோர் வெறுப்பு
அந்நாள் போன்று இவள் மேல் ஆகலை

இல்லாள் தந்த இனிய நாள் போன்று
அல்லாள் தருவது இனிமேல் ஆகா
பொல்லா வினைகள் புகாத வண்ணம்
நல்லா ளேன் னில்லாள் நலனுட னளித்தாள் “

தாய்மையின் பண்பு எனும் தலைப்பில்

“கொடியிடைத் தாயொரு குழந்தையை ஈன்றாள்
மடியிடை யேந்தியம் மழலையைத் தழுவாள்
கொழுநன் ஓர்நாள் குவலயம் நீத்தான்
அழுதாள் நங்கை அரற்றினள் ஆனால்
அவனோ அங்கே அணுகிலன் எனவே
இவளும் அவனை இணையவே எண்ணி
வளையதில் கயிற்றை வரிந்து கட்டினாள்
இளை யொன்றை தனது கரத்தால் இறுக்கினாள்

இணை யற்றசேயை இறுதி நன்னேரம்
துணை யற்றிருக்க விடுதலோ எனத்
திரும்பிப் பார்த்தாள் குழந்தை சிரித்தது
அரும்பிய சிரிப்பில் இளைதனை அறுத்தாள்
கருப்பன்ன சேயைக் கனிவுடன் எடுத்தாள்
துரும்பென நினைத்தாள் சுகதுக்கம் யாவும்
கருவினில் உதித்த நற்சேயைக் காக்கவே
விரும்பினாள் புவியை வாழ்வுடன் இணைந்தாள்”

இறைவணக்கத்திலிருந்தே அசைக்க முடியாத அடித்தளத்தை போட்டு கவிதை எனும் கட்டிடத்தை கட்டத் தொடங்குகிறார். இறைவணக்கம் சொல்லி எழுதிய கவிதை என்னை முதல் தாள் முதல் வாசிப்பிலேயே நூலுக்குள் இழுத்துப்போய் விட்டது. கவிஞருடைய கவிப் பூக்கள் ஒரு போதும் வாடாது, தொடர்ந்து பூத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனை நாங்கள் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நூலின் பெயர் :- உணர்வுகளின் சங்கமம்
நூலாசிரியர் :- இளையதம்பி அரியநாயகம்
விலை :-400

நன்றி

எழுத்தாளர்,
விமர்சகர்
ஆதன் குணா

Thinakaran
412 724.1K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! Today
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 2 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Thamil

      Thamil

      Related Posts

      நான் இந்து அல்ல, நீங்கள்..!

      நான் இந்து அல்ல, நீங்கள்..!

      by Thamil
      May 23, 2025
      0

      நூல் :- நான் இந்து அல்ல, நீங்கள்எழுத்தாளர் :- தொ. பரமசிவம்விலை :- ரூபா. 50 உலகமயமாக்கல் என்ற பேரில் பன்னாட்டு மூலதனம் தருகின்ற நெருக்கடியில் எளிய...

      ஆகாயத்துக்கு அடுத்த வீடு..!

      ஆகாயத்துக்கு அடுத்த வீடு..!

      by Thamil
      May 16, 2025
      0

      நூல் :- ஆகாயத்துக்கு அடுத்த வீடுஎழுத்தாளர் :- மு. மேத்தாவிலை :-800 ரூபாய் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிதை நூலை கைகளில் ஏந்தினேன். நூலின் முதல்...

      நான் ஸ்ரீலங்கன் இல்லை..!

      நான் ஸ்ரீலங்கன் இல்லை..!

      by Thamil
      May 9, 2025
      0

      தீபச்செல்வன் என்ற புனைப்பெயர் கொண்ட அண்ணன் பிரதீபன் ஈழ தேசத்தில் தவிர்க்கவும் மறுக்கவும் முடியாத எழுத்தாளராவார். ஈழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த அண்ணன் தீபச்செல்வனின் எழுத்துக்கள் தூங்கும்...

      நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்

      நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்

      by Mathavi
      April 26, 2025
      0

      விளக்கவுரைஎழுத்தாளர். ஆதன் குணா என்னுடைய முதல் எழுத்துரு பதிப்பானது கவிதையில் இருந்தே தொடங்குகிறது. சிறு சிறு துளிகளாக வடித்து இந்த கவிதை நூலினை சிற்பமாக வடித்துள்ளேன். நீண்ட...

      சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல்

      சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல்

      by Mathavi
      April 20, 2025
      0

      சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல் புதிய அகவையில் தடம் பதிக்கும் ரவூப் ஹக்கீம் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களில் சமகாலத்தில் பாராட்டுவதாக இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும் அதிகமாக உச்சரிக்கப்படும்...

      மூன்றாவது கண்

      மூன்றாவது கண்

      by Mathavi
      April 18, 2025
      0

      கவிஞர் இரா. மேரியனின் படைப்புகளில் ஒன்றான "மூன்றாவது கண் " கவிதை நூலினை வாசிக்க வாசிக்க கவிதைகளில் இன்பம், புத்துணர்ச்சியின் ஈடுபாடு அதிகமாக தென்படுகிறது. மரபணுவில் கவிதைத்...

      குமுதாவின் கதை… பாகம் = 01

      குமுதாவின் கதை… பாகம் = 01

      by Mathavi
      April 10, 2025
      0

      அஹா என்ன ஒரு அதிசயம் எங்கு பார்த்தாலும் பச்சை பசலையாக காட்சியளிக்கும் இயற்கை. வண்ண வண்ண பூக்களில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சிகள், பறவைகளின் கீச்சிடும் சத்தம்...

      என்னைத் தேடுகிறேன்

      என்னைத் தேடுகிறேன்

      by Mathavi
      April 10, 2025
      0

      கிணற்றடித் தென்னையின் கீழ்தென்னோலைத் துண்டொன்றைஎடுத்துப் போட்டுதென்னை நிழலையும்கடந்து வரும்பனித் துளிகளைஉடலில் சுமந்துதூங்கிய இரவுகள் அடுத்த கிணற்றடிகளின்நீர் இயந்திரங்களின் சத்தம்தாலாட்டாகத் தூங்க வைக்கஅடிக்கடி விழித்துமீண்டும் கண்களைஇறுக மூடித்தூங்கும் முயற்சிகள்...

      சென்னை விமான நிலையத்தின் அவலநிலை- சுற்றுளா பயணிகள் பெரும் அவதி!

      சென்னை விமான நிலையத்தின் அவலநிலை- சுற்றுளா பயணிகள் பெரும் அவதி!

      by Bharathy
      April 8, 2025
      0

      சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு மாத்திரம் இலவச (Wifi) வழங்குவதாகவும் வெளிநாட்டவர்களுக்கு இவ் வசதிகள் இல்லையெனவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.சென்னை விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர்களின்...

      Load More
      Next Post
      நான் ஸ்ரீலங்கன் இல்லை..!

      நான் ஸ்ரீலங்கன் இல்லை..!

      கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் ; சி.ஐ.டிக்கு விஜயம் செய்த சிவானந்த ராஜா..!

      கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் ; சி.ஐ.டிக்கு விஜயம் செய்த சிவானந்த ராஜா..!

      யாழில் எரிந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் மேற்கூரை..!

      யாழில் எரிந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் மேற்கூரை..!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி