அல்வாய் இளைஞன் ஒருவன் கம்பர்மலைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் பரந்தாமன் என்ற 25 வயதுடைய இளைஞரே நேற்று மாலை 3:00 மணியளவில் கம்பர்மலைப் பகுதியில் சடலமாக மீக்கப்பட்டுள்ளார் .
நண்பர்களுடன் சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது. மரணத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
ADVERTISEMENT