• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 30, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தமிழ்த் தாயகத்தை தமிழரே ஆள வேண்டும்..!

Thamil by Thamil
May 3, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
தமிழ்த் தாயகத்தை தமிழரே ஆள வேண்டும்..!
Share on FacebookShare on Twitter

எமது மண்ணை நாங்களே ஆள வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தியாகங்கள் அர்த்தமற்றுப் போகக்கூடாது என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர் செல்வம், தோல்விப் பயத்தில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுதாகவும் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “நேற்றைய தினம், ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வித்தியாசமான செய்திகள் வெளியாகி இருப்பதாலும், அவற்றை வைத்து சிலர் எமக்கு எதிரான பொய்யான அவதூறுகளை பரப்புவது அவதானிக்கப்படுவதால், உண்மையில் என்ன நடந்தது என்பது எமது மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும்.

உண்மையிலேயே குறித்த பகுதியில் எமது கட்சியின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து கொண்டிருந்தார். அதன்போது, எமது கட்சியின் செயற்பாட்டாளர்களாக கடந்த காலங்களில் செயற்பட்ட இருவர், நிறை மதுபோதையில் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் எமது செயலாளர் நாயத்தினை நெருங்கிச் சென்று கதைப்பதற்கு முயற்சித்த போதிலும் அங்கிருந்தவர்களினால் அதற்கு அனுமதிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் கூட்டத்தினை நிறைவு செய்து கொண்டு செயலாளர் நாயகம் புறப்படத் தயாரான போது, மதுபோதையில் இருந்தவர்களுள் ஒருவர், எமது வாகனம் செல்வதற்கான வீதியில் தடையை ஏற்படுத்தும் நோக்கில் வீதியால் சென்ற உழவு இயந்திரத்திற்கு குறுக்காக விழுந்து படுத்துக் கொண்டார். அதன் போது அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகின்றோம்.

இந்நிலையில் அங்கிருந்தவர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து அவரை அப்புறப்படுத்தி உழவு இயந்திரத்தினை அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து, செயலாளர் நாயகத்தின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டது. அதன் பின்னர் மதுபோதையில் இருந்ந 2 ஆவது நபர், எமது கூட்டம் நடாத்தப்பட்ட வீட்டிற்கு சென்று அங்கிருந்த பெண்மணியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனால், ஆத்திரமடைந்த ஊரவர்கள் குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்ட நிலையில், பொலிஸார் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியவரை கைது செய்துள்ளதுடன், உழவு இயந்திரத்தின் குறுக்கே படுத்து காயம் ஏற்படுத்திக் கொண்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதான் உண்மை. இந்தச் சம்பவமானது திட்டமிட்ட முறையில் எமக்கு அவப்பெயரை ஏற்படுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்ட சம்பவமாகவே பார்க்கின்றோம்.

எமது வெற்றி வாய்ப்பை தடுப்பதற்கு அனைத்து சூழ்ச்சிகளையும் அண்மைக்காலமாக முன்னெடுத்து வருகின்றவர்கள், ஊர்காற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி எளிதாக கைப்பற்றும் என்பதை உணர்ந்து கொண்டுள்ள நிலையில், வெற்றியை தடுப்பதற்கான முயற்சியாக இந்தச் சூழ்ச்சியை முன்னெடுத்த போதிலும், எமது தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் சகிப்புத் தன்மை, பொறுமை போன்றவற்றினால் இதனை திட்டமிட்டவர்கள் எதிர்பார்த்த விபரீதம் எதும் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் எமது மக்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது. இந்த மண் எங்களின் மண். இதனை நாமே ஆள வேண்டும் என்பதற்காக அளப்பரிய தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன. இற்றைக்கு 39 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதலாவது பெண் போராளியான ஷோபா இன்றைய நாளிலேயே தன்னுடை உயிரரை தியாகம் செய்திருந்தார்.

எந்த அமைப்பின் ஊடாக அந்த தியாகங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அவை மதிக்கப்பட வேண்டும். வீண் போகக்கூடாது என்பதை மனதில் வைத்து உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 1 day ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 2 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 2 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Thamil

      Thamil

      Related Posts

      5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

      5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

      by Thamil
      May 30, 2025
      0

      தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (30) இரவு 9 மணி முதல் நாளை (31) இரவு 9...

      போதைப்பொருள் வர்த்தகரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மடக்கிப்பிடித்த பொலிஸ்..!

      போதைப்பொருள் வர்த்தகரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மடக்கிப்பிடித்த பொலிஸ்..!

      by Thamil
      May 30, 2025
      0

      வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, வெல்லவாய நகருக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பின் போது, வெல்லவாய பிரதேசத்தில்...

      ஒருபோதும் பதவிகளையும், பட்டங்களையும் எதிர்பார்த்து செயலாற்றவில்லை..!

      ஒருபோதும் பதவிகளையும், பட்டங்களையும் எதிர்பார்த்து செயலாற்றவில்லை..!

      by Thamil
      May 30, 2025
      0

      அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக...

      சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மின்தடை..!

      சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மின்தடை..!

      by Thamil
      May 30, 2025
      0

      நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மின்தடைகள் குறித்து இதுவரை 29 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள்...

      யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு..!

      யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றைய தினம் (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை - நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த திகாசன் அபிசிறி என்ற...

      கொழும்பில் கனமழை காரணமாக ஐவர் காயம்..!

      கொழும்பில் கனமழை காரணமாக ஐவர் காயம்..!

      by Thamil
      May 30, 2025
      0

      கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (30) பிற்பகல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்த ஐவரும் தற்போது...

      உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதா? – அநுரவிடம் மனோ கேள்வி..!

      உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதா? – அநுரவிடம் மனோ கேள்வி..!

      by Thamil
      May 30, 2025
      0

      "வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள்தானே திரும்பி வரச் சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் அவர்களைக் கைது செய்வதா? அவர்களைப் பிணையில் வெளியே விடாமல் எதற்காகச் சிறையில்...

      தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் ; நடவடிக்கை எடுக்குமாறு மனோ வலியுறுத்து..!

      தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் ; நடவடிக்கை எடுக்குமாறு மனோ வலியுறுத்து..!

      by Thamil
      May 30, 2025
      0

      "ஆலயச் சிலை பீடத்தில் பாதணியுடன் காலைத் தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடுவது, சிலையின் தலையா? காலையா?...

      தமிழ் அகதிகள் விடயத்தில் அநுர அரசு இரட்டை வேடம் – சுமந்திரன் தெரிவிப்பு..!

      தமிழ் அகதிகள் விடயத்தில் அநுர அரசு இரட்டை வேடம் – சுமந்திரன் தெரிவிப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      "தமிழ்நாட்டில் இருந்து முறைப்படி தாயகம் திரும்புபவர்களையும் சிறையில் தள்ளுவதன் மூலம் தமிழர்கள் நாட்டுக்குள் வரக்கூடாது என அநுர அரசு விரும்புகின்றதா?" என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில்...

      Load More
      Next Post
      வாழைச்சேனை மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கண்காட்சி..!

      வாழைச்சேனை மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கண்காட்சி..!

      முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் புகையிரத ரயில்கள் இன்றிலிருந்து நிறுத்தம்.!.

      முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் புகையிரத ரயில்கள் இன்றிலிருந்து நிறுத்தம்.!.

      பிரியாணி செய்யத் தெரியவில்லையெனக் கூறி வெளிநாட்டு மாப்பிள்ளை விவாகரத்து..!

      பிரியாணி செய்யத் தெரியவில்லையெனக் கூறி வெளிநாட்டு மாப்பிள்ளை விவாகரத்து..!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி