கொஸ்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞன் போதைப்பொருளுக்கு மிகவும் அடிமையாகி, போதைப்பொருள் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், பொலிஸாரின் தாக்குதலின் விளைவாக அந்த இளைஞன் இறந்து விட்டதாக குடும்ப உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனினும், சந்தேக நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.