நாவிதன்வெளி பிரதேச சபை சாளம்பைக்கேணி பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.பி. நவாஸ் அவர்களை ஆதரித்து (02) இப் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலேவ்வை, கட்சியின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் தலைவரும், முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களும், மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இப் பிரதேச கிளைக் குழுக்களின் முக்கிய உருப்பினர்களும், கட்சியின் போராளிகள், எனப் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.



