சிலியில் இன்று 7.5 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அபாயகரமான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிலி மற்றும் ஆர்ஜென்டினா கடற்கரையில் டிரேக் பாஸேஜில் உள்ள புவேர்ட்டோ வில்லியம்ஸில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு சேவை, சுனாமி அபாயம் காரணமாக தெற்கு சிலியில் உள்ள மாகெல்லன் பிராந்தியத்தின் கடலோரப் பகுதியிலிருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய நில அதிர்வு மையத்தின்படி, இந்த நிலநடுக்கம் இன்று காலை உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் ஏற்பட்டது.