அமைதியான தேர்தலுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று கிண்ணியா விசன் மண்டபத்தில் இன்று (02) இடம் பெற்றது.
குறித்த நிகழ்வை நீதியானதும் சுதந்திரமானதுமான மக்களுக்கான தேர்தலுக்கான இயக்கம் (CAFFE) ஏற்பாடு செய்திருந்தது.
தேர்தல் காலங்களில் ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய முறை தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டன.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு குறித்த நிகழ்வு இடம் பெற்றிருந்தது. இதன் போது வளவாளராக தகவல் அறியும் உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி ஜகத் லியானராச்சி கலந்து சிறப்பித்தார். இதில் மாவட்ட இணைப்பாளர் ராபில், சமூக பெண் சிவில் செயற்பாட்டாளர்கள், பெண் வேட்பாளர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அமைதியான தேர்தலுக்கான எனும் பதாகையிலும் கலந்து கொண்டவர்கள் கையொப்பமிட்டனர்.
இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ததில் இருந்து கெபே அமைப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அந்த அடிப்படையில் தேர்தலுக்கான முன்னர், பின்னர், தேர்தல் அன்று என மூன்று தினங்களில் குறிப்பாக கண்காணிப்பு இடம் பெறுகின்றது.
மாவட்ட மட்டத்தில் 26 இணைப்பாளர்களும் தேசிய மட்டத்தில் 105 கண்காணிப்பாளர்களும் தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலுக்கு முன் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகின்ற போது அதிகமான முன்னேற்றம் கண்டுள்ளது வன்முறையற்ற தேர்தல் கலாசாரம் குறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. 2011, 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விடவும் வன்முறை சம்பவங்கள் குறைந்தளவில் பதிவாகியுள்ளது. எனவே தான் சமாதானமான சுமூகமான தேர்தலை நடாத்த இந்த காலப் பகுதியில் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்களின் அபேட்சகர்கள் ஒத்துழைக்கவும் எனவும் வன்முறையற்ற தேர்தலில் ஒத்துழைக்க வேண்டும் எனவும் மேலும் கெபே அமைப்பு வேண்டிக் கொள்கின்றது என்றார்.




