இம்மக்கள் சந்திப்பானது நாவிதன்வெளி பிரதேச சபை வீரத்திடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் MB.நவாஸ் அவர்களை ஆதரித்து (01) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர்கள், விவசாய சங்கத்தினர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் MS.உதுமாலெவ்வை, கட்சியின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசன் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களும், மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன் கலந்து கொண்டு முக்கிய பல விடயங்களை அம் முக்கியஸ்தர்களுடன் கலந்து ஆராய்ந்து அவர்களுக்கு தெளிவூடட்டப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இப்பிரதேச கிளைக் குழுக்களின் முக்கிய உருப்பினர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.




