குருநாகல் தெதுரு ஓயாவில் வியாழக்கிழமை (1) பிற்பகல் நீராடச் சென்ற ஐந்து பேர் நீரில் இழுத்துச் சென்றிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அவர்களில் இருவர் காணாமல் போயுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவமானது பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றதோடு, அவர்களில் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன இருவர் கண்டி பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் கடையில் பணி புரியும் 20 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்கள் ஆவர்.
மேலும் மூன்று இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களும் இந்தக் கடையில் பணிபுரிவதாகக் கூறப்படுகின்றது.
காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக உள்ளூர்வாசிகள் படகுகளைப் பயன்படுத்தி நடவடிக்கையைத் தொடங்கிய போதிலும், பிற்பகல் வரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.இந்தச் சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.