• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அரசின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன்.!

Mathavi by Mathavi
May 30, 2025
in இலங்கை செய்திகள்
0
அரசின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன்.!
Share on FacebookShare on Twitter

“அரசின் குறைகளைக் சுட்டிக்காட்டுவதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக என்னை அச்சுறுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது. பரிசோதனைகள் ஏதுமின்றி சட்டவிரோதமான முறையில் 323 கொள்கலன்களைச் சுங்கத்தில் இருந்து விடுவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்கவைக் கைது செய்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளாமல் எனக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிப்பது எந்த விதத்தில் நியாயமானதாகும்? அச்சுறுத்தல்களால் அடிபணியப் போவதில்லை என்பதை அரசிடம் தெரிவித்துக்கொள்கின்றேன்.”

இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“பரிசோதனைகள் ஏதுமின்றி சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான உண்மையை அரசு இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. இந்தக் கொள்கலன்களை விடுவிப்பதற்குத் தான் பணித்ததாக கப்பல் துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டிருந்தார்.

சுங்கத் திணைக்களம் கப்பல் துறை அமைச்சின் விடயதானங்களுக்குள் உள்ளடங்காது. ஜனாதிபதியின் வசமுள்ள நிதி அமைச்சின் விடயதானத்துக்குள் உள்ளடங்கும். ஆகவே, அமைச்சர் பிமல் ரத்நாயக்க சட்டவிரோதமான முறையில் இந்தக் கொள்கலன்களை விடுவிப்பதற்குப் பணித்துள்ளார். ஆகவே, அவரை உடன் கைது செய்து விசாரிக்குமாறு குறிப்பிட்டேன்.

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் குறித்து நான் குறிப்பிட்ட விடயங்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்கள். சட்டவிரோதமாகச் செயற்பட்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்கவைக் கைது செய்து விசாரணை செய்வதை விடுத்து என் மீது முறைப்பாடு அளிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?

இந்தக் கொள்கலன்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் சுங்கத் திணைக்களத்திடம் முன்வைத்த கேள்விகளுக்குச் சுங்கத் திணைக்களம் ‘தாங்கள் கோரிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குரிய ஆவணங்கள் தற்போது சுங்கத் திணைக்களத்திடம் இல்லை’ என்று எனக்குப் பதிலளித்துள்ளது. தற்போது இல்லையாயின் ஆரம்பத்தில் அந்த ஆவணங்கள் இருந்துள்ளன. தற்போது காணாமல் ஆக்கப்பட்டுள்ளன என்றே கருத வேண்டும்.

அரசின் குறைகளைக் சுட்டிக்காட்டுவதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக என்னை அச்சுறுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது. அச்சம் என்பதொன்று இருக்குமானால் இந்த அரசுடன் நான் மோதியிருக்க மாட்டேன் என்பதை ஜனாதிபதியிடமும் அரசிடமும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

Related Posts

இளைய சமூகத்திடம் துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!

இளைய சமூகத்திடம் துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!

by Thamil
July 19, 2025
0

"இன்றைய காலத்தில் தங்கள் தேவைக்கு துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்துபவர்களைவிட தேக ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துபவர்களே அதிகம். இன்றைய இளைய சமூகத்திடம் துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும்" என...

பொழுதுபோக்கு பூங்காவிற்கு கள விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்..!

பொழுதுபோக்கு பூங்காவிற்கு கள விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்..!

by Thamil
July 19, 2025
0

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக திட்ட வரைவு ஒன்றை தயாரித்து எதிர்வருகின்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பணம் செய்வதற்காக திருகோணமலை மாவட்ட...

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம் – உதய கம்மன்பில தெரிவிப்பு..!

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம் – உதய கம்மன்பில தெரிவிப்பு..!

by Thamil
July 19, 2025
0

"யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது"என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,...

இளம் யுவதி வெட்டிக் கொ*லை; தென்னிலங்கையில் கொடூரம்..!

இளம் யுவதி வெட்டிக் கொ*லை; தென்னிலங்கையில் கொடூரம்..!

by Thamil
July 19, 2025
0

இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. காணித் தகராறில் உறவினர்களுக்கிடையிலான...

எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முன் உங்கள் அப்பா எங்கே எனச் சொல்லுங்கள் – சமந்த பதிலடி..!

எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முன் உங்கள் அப்பா எங்கே எனச் சொல்லுங்கள் – சமந்த பதிலடி..!

by Thamil
July 19, 2025
0

"எங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் எனச் சொல்லுங்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த நபரென்றால் எதற்காக ஒளிந்து விளையாட வேண்டும்"...

விமான நிலையங்களின் அருகில் பட்டம் விடுவதற்கு தடை..!

விமான நிலையங்களின் அருகில் பட்டம் விடுவதற்கு தடை..!

by Thamil
July 19, 2025
0

நாட்டின் சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் பறக்க விடுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; விரைவில் சிலர் சிறைக்குள் – நளிந்த தெரிவிப்பு..!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; விரைவில் சிலர் சிறைக்குள் – நளிந்த தெரிவிப்பு..!

by Thamil
July 19, 2025
0

'உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்' என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில்...

ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்..!

ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்..!

by Thamil
July 19, 2025
0

"முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்" என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு நேற்றைய தினம்...

கடலில் மூழ்கிய இரு இளைஞர்கள் உயிருடன் மீட்பு..!

கடலில் மூழ்கிய இரு இளைஞர்கள் உயிருடன் மீட்பு..!

by Thamil
July 19, 2025
0

அம்பாறை, பொத்துவில் கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம்...

எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை..!

எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை..!

by Thamil
July 19, 2025
0

"நாட்டில் இன்று பல உதிரிகளாகப் பிரிந்து எதிரணிகள் வங்குரோத்து அடைந்துவிட்டன. வலுவான எதிரணி என்று தற்போது ஒன்றும் இல்லை" என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி