இலங்கையில் நடைபெறும் மகளிருக்கான முத்தரப்பு தொடரில் இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
கடந்த 27-ந் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரதிகா ராவல் 78 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.
முன்னதாக இந்திய அணி வீராங்கனை பிரதிகா ராவல் அரை சதம் அடித்ததன் மூலம் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
அந்த வகையில் மகளிர் ஒருநாள் போட்டியில் குறைந்த ஆட்டத்தில் 500 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை பிரதிகா படைத்துள்ளார்.
முதல் 8 போட்டிகளில் 40(69), 76 (86), 18 (23), 89 (96), 67 (61), 154 (129), 50 (62), 78 (91) அவர் 5 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார்.
அதிவேக 500 ரன்கள் குவித்த வீராங்கனைகள் விவரம்:-
பிரதிகா ராவல் 8 இன்னிங்ஸ் (இந்தியா)
சார்லோட் எட்வர்ட்ஸ் 9 இன்னிங்ஸ் (இங்கிலாந்து)
நிக்கோல் போல்டன் 11 இன்னிங்ஸ் (ஆஸ்திரேலியா)
பெலிண்டா கிளார்க் 12 இன்னிங்ஸ் (ஆஸ்திரேலியா)
வெண்டி வாட்சன் 12 இன்னிங்ஸ் (இங்கிலாந்து)
மேலும் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த 3-வது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
188 தீப்தி சர்மா vs IRE-W, போட்செஃப்ஸ்ட்ரூம், 2017
171* ஹர்மன்ப்ரீத் கவுர் vs AUS-W, டெர்பி, 2017
154 பிரதிகா ராவல் vs IRE-W, ராஜ்கோட், 2025
143* ஹர்மன்ப்ரீத் கவுர் vs ENG-W, கேன்டர்பரி, 2022
138* ஜெயா சர்மா vs PAK-W, கராச்சி, 2005