யாழில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜே/208 கிராம சேவகர் பிரிவில் இரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரும், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜே/279 கிராம சேவகர் பிரிவில் 1 குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜே/301 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 3 பேரும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜே/426 கிராம சேவகர் 1 குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்தார்.


