புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கோறல் குரூப் நிறுவனங்களின் அதிபர் கலாநிதி சு.பிரபாகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
“உள்ளக விளையாட்டுப் போட்டிகள், பண்டிகைகள் சிறப்புற பெரிதும் பங்களிப்புச் செய்வோர் ஆண்களா? பெண்களா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற்றது.மேலும் முற்றிலும் இளையவர்களைக் கொண்ட பாட்டரங்கம் மற்றும் ஆடல் அரங்கம் என்பன இடம்பெற்றன.
ADVERTISEMENT
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.




