ஏ 35 பிரதான வீதியினூடாக புது குடியிருப்பு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறி ஒன்றில் மரம் கடத்தல் இடம்பெறுவதாக தர்மபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக தருமபுர போலீசார் அன்றைய தினம் 27.04.2025 வீதி சோதனையை மேற்கொண்ட பொழுது பெறுமதி மிக்க 12 முதிரை மரக்குத்திகளுடன் சிறிய ரக லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் இன்று 28.04.2025 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT