ஹாலி எல, உடுவர பகுதியில் இன்று (27) மாலை ஏற்பட்ட மண்சரிவில் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
இடிந்து விழுந்த வீட்டில் சிக்கிய ஒரு குழந்தையும், ஒரு பெண்ணும் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மண் மேடு சரிந்ததால் வீட்டிற்கும், வீட்டில் இருந்த உபகரணங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
ADVERTISEMENT
அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மண் மேடு சரிந்து விழுந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.