நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 30-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சேப்பாக்கத்தில் நடக்கும் 6-வது ஆட்டம் இதுவாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை தொடங்கியது. சென்னை அணியின் தொடர் தோல்வியால் டிக்கெட் விற்பனை மந்தமாகியுள்ளது.
எப்போது டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளை விற்று தேர்ந்து விடும். பின்னர் டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் கள்ள சந்தையில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் கிட்டத்தட்ட வெளியேறியுள்ளதால் சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியை நேரில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனையை காட்டிலும் இந்த முறை குறைவான அளவிலேயே விற்பனை தற்போது வரை நடைபெற்றுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.