சற்றுமுன் சுட்டுக் கொல்லப்பட்ட டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டியவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இன்று இரவு 9:10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. காயமடைந்த டான் பிரியசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மற்றொருவருக்கு சிறுகாயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.