• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மாணவியின் உயிர்மாய்ப்பை அநுர அரசு அலட்சியப்படுத்துவதன் நோக்கம் என்ன?

Mathavi by Mathavi
May 9, 2025
in இலங்கை செய்திகள்.
0
மாணவியின் உயிர்மாய்ப்பை அநுர அரசு அலட்சியப்படுத்துவதன் நோக்கம் என்ன?
Share on FacebookShare on Twitter

“பாடசாலை மாணவியின் உயிர்மாய்ப்புடன் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மத்திய அமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இவரைப் பாதுகாப்பதற்கு அநுர அரசு இந்த விடயத்தை அலட்சியப்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. மாணவியின் உளவியல் தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கம் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும்.?” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ‘அ’ அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“மக்களுக்குப் பல போலியான வாக்குறுதிகள் மற்றும் பொய்களைக் குறிப்பிட்டு ஆட்சியமைத்த அரசு இன்று திண்டாடுகின்றது. தேர்தல் காலத்தில் நாம் பொய்யுரைக்கவில்லை. இயலுமானதையே குறிப்பிட்டோம். சவால்களுக்கு மத்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். எமக்கு வாக்களித்த மக்களுக்கு எமது நன்றிகள். அரசியலில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளோம்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் உளவியல் ரீதியான பாதிப்புக்களினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு தற் கொ லை செய்யும் நிலை காணப்படுகின்றது.

அண்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதையால் பாதிக்கப்பட்டு தற் கொ லை செய்துகொண்டார். மக்கள் விடுதலை முன்னணிக்குப் பகிடிவதை தொடர்பில் புதிதாக எதையும் குறிப்பிடத் தேவையில்லை.

அவர்கள் பகிடிவதைகள் தொடர்பில் ஏனையவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். ஏனெனில், பல்கலைக்கழகங்களில் பகிடிவதையின் கர்த்தாக்கள் அவர்கள்தான். தமது அரசியல் தேவைக்காகப் பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை வன்முறையாக மாற்றியமைத்தார்கள்.

கொழும்பில் பாடசாலை மாணவி ஒருவர் தற் கொ லை செய்துகொண்ட விடயம் தற்போது பிரதான பேசுபொருளாகியுள்ளது. எமது சக உறுப்பினர் மனோ கணேசன் அந்த மாணவி தொடர்பில் இங்கு பேசினார். அந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பதிலளித்தார்.

இந்த மாணவியின் உளவியல் தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். மருத்துவ அதிகாரிகள் சங்கம் எவ்வாறு உளவியல் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க முடியும்? இதனை எம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்தச் சம்பவத்துடன் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மத்திய அமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இந்த விவகாரத்தில் அவரைப் பாதுகாப்பதற்காக அநுர அரசு கவனம் செலுத்தாது அலட்சியப்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. இதனை அரசியலாக்க வேண்டிய தேவை எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாது. உயிரிழந்த மாணவிக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து பேசுபொருளாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தாதீர்கள்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் கல்கிஸையில் 19 வயது இளைஞன் பகல் வேளையில் பிரதான வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், ‘இந்த இளைஞனின் தாயார் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றார். அதனால்தான் இந்தக் கொ லை இடம்பெற்றுள்ளது’ – என்று கூறினார்.

இவ்வாறு எப்படிக் கூற முடியும்? முறையான விசாரணைகள் நடந்ததன் பின்னரா இவ்வாறு அவர் குறிப்பிட்டார்? தாய் போதைப்பொருள் வியாபாரி என்றால் அந்த இளைஞன் ஏன் இளம் வயதில் வீதிகளைத் துப்பரவு செய்ய வேண்டும்? அவர் கோடீஸ்வரராக அல்லவா இருந்திருப்பார்? பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கருத்து இந்தக் கொலையை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

போதைப்பொருளுடன் தொடர்புபட்டிருந்தாலும் நடுவீதியில் வைத்து சுட்டுக் கொல்ல முடியுமா? தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடம் கற்பிப்பதாகக் கூறிக்கொண்டு வந்தவர்களுக்கு இன்று தனிமனித பாதுகாப்பு தொடர்பில் கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” – என்றார்.

Related Posts

பெண் ஒருவரைக் காணவில்லை.!

பெண் ஒருவரைக் காணவில்லை.!

by Mathavi
June 8, 2026
0

மட்டக்களப்பு எருவிலை சேர்ந்த கீர்த்தனா எனும் 24 வயதான ஒரு பெண்ணை காணவில்லை. எனவே, குறித்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 0740869024, 0701921595 எனும்...

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் ஆட்சியாளர்கள் ஒளிந்து கொள்ள இடமிருக்காது!

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் ஆட்சியாளர்கள் ஒளிந்து கொள்ள இடமிருக்காது!

by selvan
June 8, 2026
0

"வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த இடத்தைக் கண்டறிந்து துல்லியமான தகவல்களை வழங்கிய இராணுவ வீரரான சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்புக்கும்...

சொல்லிசைப்  பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

சொல்லிசைப்  பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

by selvan
June 8, 2026
0

சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் வல்வெட்டிதுறையில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் வல்வெட்டித்துறை நகரில் இடம்பெற்றது பிரதேச இளைஞர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட...

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

by selvan
June 8, 2026
0

கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு மூடப்பட்டுக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டம்; சாதாரண இளைஞர்களுக்கு ஒரு சட்டமா?

சலே விவகாரம்; நாமல் காட்டம்.!

by Mathavi
June 8, 2026
0

"உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். பொறுப்புக்கூறல் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், அரசியல் பழிவாங்கல்களை நோக்கமாகக் கொண்ட விசாரணைகள், உயிர்த்த...

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

by selvan
June 8, 2026
0

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டும் என ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர்...

ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!

ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!

by selvan
June 8, 2026
0

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி அக் கல்லூரி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை (8) காலை...

மத்திய மலைநாட்டில் கனமழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு!

மத்திய மலைநாட்டில் கனமழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு!

by selvan
June 8, 2026
0

மத்திய மலைநாட்டில் மேற்குச் சரிவுகளில் பல வாரங்களாகப் பெய்து வரும் கனமழையால், தேசிய நீர்மின் சக்தி அமைப்பிற்குச் சொந்தமான மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம்...

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

by selvan
June 8, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர், சக மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையின் மூலம்...

ஜூன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

ஜூன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

by selvan
June 8, 2026
0

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் முன்னெடுகவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி