செம்பியன்பற்று பிலிப்பு நேரியார் ஆலய புனித வியாழன் திருப்பலி மிக ஆன்மீக ரீதியில் இடம்பெற்றது.
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பிலிப்பு நேரியார் ஆலய புனித வியாழன் திருப்பலி இன்று (17) மாலை 6 மணிக்கு அருட்தந்தை மரிய சுதன் தலைமையில் ஆரம்பமானது.
இத் திருப்பலியானது கிறிஸ்தவர்களின் சடங்கு வழிபாடுகளில் ஒன்றாகும். அதாவது யேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு என்பவற்றை மையமாக கொண்டு அதன் வெளிப்பாடாக யேசு கிறிஸ்து இன்றைய தினம் தனது இறுதி இராவுணவினை தமது சீடர்களுடன் பரிமாறியதை வெளிப்படுத்தும் முகமாகவும் தமது சீடர்களுக்கு கால் கழுவியதையும் ஆன்மீக ரீதியில் திருப்பலியில் வெளிப்படுத்தப்பட்டது.
அதாவது அருட்தந்தை யேசு கிறிஸ்துவாகவும் ஆலய பங்கு மக்களில் பன்னிரண்டு (12) பேரினை சீடர்களாகவும் எண்ணி பங்கு மக்களின் கால்களை கழுவி யேசு கிறிஸ்துவின் பாடுகள் மரணத்தினை ஆன்மிக ரீதியில் ஆயத்தம் செய்ததினை காணக்கூடியதாக இருந்தது.
இத் திருப்பலியில் ஊர் மக்கள் பலரும் கருப்பு வெண்மை ஆடைகளை அணிந்து கொண்டு வந்ததை காணக்கூடியதாக இருந்தது.


