சகோதரர் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 10 லட்சம் பெறுமதியான உந்துருளி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் உள்ள சுரங்கத்தை அண்டிய பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிசார் கருத்து தெரிவிக்கையில், இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் சண்டையில் முடிந்து இருவரும் படு காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ADVERTISEMENT
சண்டையின் போது 10 லட்சம் ரூபாய் பெறுமதியான உந்துருளி தீ வைக்கப்பட்டு எரிந்த நிலையில் பொலிசார் மீட்டுள்ளனர்.

