திருமணம் முடிந்து சில நாட்களேயான நிலையில் மணமகள் கணவனை கைவிட்டு காதலனுடன் சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
புலம்பெயர் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த மணமகன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சம்பிரதாயபூர்வமாக திருமணம் முடித்துள்ளார்.
ADVERTISEMENT
பின்னர் சட்டபூர்வமாக திருமண பதிவு இடம்பெறவிருந்த நிலையில், மணமகள் கணவனை கைவிட்டு காதலனுடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.