புத்தளம், ஆராச்சிக்கட்டு, பத்துலு ஓயா பகுதியில் இன்று திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளதாக ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆராச்சிகட்டுவ, பட்டுலுஓயா பகுதியில் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் ஒரு கடை மற்றும் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



