கனடாவின் நீதி மற்றும் சட்டமா அதிபராகவும் வட பிராந்திய சுதேச அமைச்சராகவும் ஈழ தமிழரான யாழ்ப்பாணத்தில் பிறந்த ஹரி ஆனந்த சங்கரி அவர்கள் கனடாவின் ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கெரி ஆனந்தசங்கரி ஆவார்.
இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர் கனடா சென்றார்.
இவர் ஸ்காபுரோ றூச் பார்க் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
அத்துடன் அட்டர்னி ஜெனரலாகவும், மற்றும் கிரவுன் – இனிஜினஸ் ரிலேஷன்ஸ் மற்றும் வடக்கு விவகாரங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈழத் தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மேற்கத்திய அரசாங்கத்தில் இவ்வளவு மூத்த பதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறை எனலாம். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும், இதன் மூலம் இந்தப் பதவியை வகிக்கும் முதல் தமிழ்-கனடியர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.
ஒரு வழக்கறிஞரும் தமிழர் உரிமைகளுக்காக நீண்டகாலமாக வாதிடும் ஆனந்தசங்கரி, இலங்கையில் போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கும் இனப் படு கொ லைக்கான பொறுப்புக்கூறலுக்கும் அழுத்தம் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
கனடாவின் நீதித்துறை அமைச்சராக ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டது. கனடாவிலும் உலகளவில் தமிழ் சமூகத்திற்கு ஒரு மைல்கல் ஆகும்.
பொறுப்புக்கூறலுக்காக இலங்கை மீது சர்வதேச அழுத்தம் இருக்கும் ஒரு முக்கியமான நேரத்தில் அவரது நியமனம் இடம்பெற்றுள்ளது.