நாவுல – பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த தம்பதி ஹிங்குராக்கொட பகுதியில் வசிக்கும் 47 வயதுடைய ஆண் மற்றும் 41 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கஹவெல பகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது, முன்னால் பயணித்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு சிறிய பாரவூர்தியொன்று மோதியதில் இந்த ஏற்பட்டுள்ளது.
விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி பாரவூர்தியுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.