எல்ல நானு ஓயா ஒடிசி ரயிலில் நபர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
நானு ஓயாவிலிருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த ஒடிசி ரயிலில் ஹாலி எலைக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த நபர் மோதி உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது பதுளை ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் யாரென்று அடையாளம் காணப்படவில்லை எனவும் குறித்த நபருக்கு வயது 40 இருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.