லிபியா கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 63 பேர் படகில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 37 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.