வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்…
பசார்வீதியில் அமைந்துள்ள நகைப்பட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் நேற்றையதினம் இரவு வீட்டிலிருந்து தொழில் நிமிர்த்தம் கடைக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிகட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டது.
சம்பவத்தில் சாந்தசோலை பகுதியை சேர்ந்த சுப்பையா ஆனந்தன் வயது 40 குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
அவர் மாடிக்கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்ததால் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்




