• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அரசின் பழிவாங்கும் பட்டியலில் எனது பெயரும் உண்டு.!

Mathavi by Mathavi
June 30, 2026
in இலங்கை செய்திகள்.
0
அரசின் பழிவாங்கும் பட்டியலில் எனது பெயரும் உண்டு.!
Share on FacebookShare on Twitter

சில குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை உற்று நோக்கினாலே, அடுத்த 6 மாத காலப்பகுதியில் யார் சிறைக்குச் செல்லப் போகின்றார்கள் என்பதை மிகத் துல்லியமாக அறியமுடிகின்றது என்றும், அவ்வாறு வெளியிடப்படும் எதிர்வுகூறல்களில் தனது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

கேகாலை மாவட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஊடகவியலாளர் ஹட்சன் சமரசிங்க நடத்திய காலை நேர நிகழ்ச்சியில் எதனைத் தெரிவிக்கின்றாரோ, அதுவே அன்றைய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அல்லது அரச வட்டாரத்தின் முடிவு என்பதை மக்கள் எளிதாகப் புரிந்துகொண்டார்கள். இன்று நாட்டின் ஊடகக் கட்டமைப்பு அதே பாணியிலேயே அரசால் கையாளப்பட்டு வருகின்றது.

தற்போது ஹட்சன் சமரசிங்க போன்றவர்கள் இல்லை. அதற்குப் பதிலாக 2 அல்லது 3 யூடியூப் சேனல்கள் மாத்திரமே முன்னிலையில் உள்ளன. அந்த யூடியூப் சேனல்களை உற்று நோக்கினாலே, அடுத்த 6 மாத காலப்பகுதியில் யார் சிறைக்குச் செல்லப் போகின்றார்கள் என்பதை மிகத் துல்லியமாக அறியமுடிகின்றது. அரச மாளிகையில் எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே இந்த யூடியூப் சேனல்கள் ஊடாகத் தகவல்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.

அவ்வாறு வெளியிடப்படும் எதிர்வுகூறல்களில் என்னுடைய பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அடக்குமுறை மற்றும் பழிவாங்கும் நடைமுறைகளை நேரில் அனுபவித்தவன் என்ற ரீதியிலும், அது குறித்த அரசியல் அறிவைக் கொண்டவன் என்ற அடிப்படையிலும் நான் ஒன்றை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த அரசு இவ்வாறான பழிவாங்கும் கட்டமைப்பு மற்றும் ஊடக அடக்குமுறை இயந்திரத்தை எவ்வளவுதான் பயன்படுத்த முற்பட்டாலும், அதனை நீண்ட காலத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. ஏனெனில், தற்போதைய ஆட்சியாளர்கள் குறிப்பிடும் 75 வருட சாபக்கேட்டு அரசியலில், எப்போதும் கடுமையான விமர்சனங்களுக்கும் மக்களின் எதிர்ப்புகளுக்கும் உள்ளான ஓர் அதிகார இயந்திரமே இதுவாகும்.” – என்றார்.

Related Posts

கோர விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு.!

கோர விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

கொழும்பு, கடுவெலை பிரதேசத்தில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

இன, மதவாத மோதல்களுக்கு இலங்கையில் இனி இடமில்லை.!

இன, மதவாத மோதல்களுக்கு இலங்கையில் இனி இடமில்லை.!

by Mathavi
June 30, 2026
0

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து நாட்டைச் சீர்குலைத்த யுகம் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

இரத்தினக்கற்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 30, 2026
0

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திவெவ பகுதியில், நேற்று (29) திங்கட்கிழமை தொல்பொருள் மதிப்புமிக்க செம்பு பாத்திரம் மற்றும் இரத்தினக்கற்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஜயந்திவெவ பகுதியை...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.!

by Mathavi
June 30, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குவதாகத் தெரிவித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசுக்கு அதனை நீக்கும் எண்ணம் இல்லை என்றும், எதிர்க்கட்சியினரை அடக்குவதற்காகவே அந்தச் சட்டம் தொடர்ந்து...

இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பே இல்லை.!

இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பே இல்லை.!

by Mathavi
June 30, 2026
0

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி மீண்டும் கூடவுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதில் நிலவும் முட்டுக்கட்டைக்கு உடனடியாகத் தீர்வு...

எங்களை அசைக்கவே முடியாது.!

எங்களை அசைக்கவே முடியாது.!

by Mathavi
June 30, 2026
0

மக்களால் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நிறுவப்பட்ட எமது அரசை எதிர்க்கட்சிகளால் ஒருபோதும் அசைக்க முடியாது என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசின்...

கணக்குக் காட்டாத வேட்பாளர்களுக்கு செக்.!

கணக்குக் காட்டாத வேட்பாளர்களுக்கு செக்.!

by Mathavi
June 30, 2026
0

தேர்தல் பிரச்சார செலவீன அறிக்கைகளைச் சட்டபூர்வ காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குகளின் தற்போதைய...

கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்; குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்; குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

மக்களின் பணத்தைப் பிடுங்கி மக்களுக்கே கொடுக்கும் அரசு.!

மக்களின் பணத்தைப் பிடுங்கி மக்களுக்கே கொடுக்கும் அரசு.!

by Mathavi
June 30, 2026
0

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, கடந்த 3 வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியில் மக்களின் உண்மையான வருமானம் எந்த வகையிலும் அதிகரிக்கவில்லை என்றும், மக்களிடமிருந்து வரியாகப் பெறப்படும் பணமே மீண்டும்...

மலையகத்தின் பல பகுதிகளில் தன்சல் நிகழ்வுகள்!

மலையகத்தின் பல பகுதிகளில் தன்சல் நிகழ்வுகள்!

by selvan
June 29, 2026
0

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பகுதிகளில் தான சாலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. மாஸ்கெலிய, நியூ சமன்புரா  ஸ்டோர்ஸ் வளாகத்தில் அதன் உரிமையாளரின் ஏற்பாட்டில் ஜஸ்கிரீம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி