• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 1, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

யாழ் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Mathavi by Mathavi
January 23, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
யாழ் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு எதிர்வரும் 25ம், 26 ம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விவரிப்பு இன்று காலை 10:00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்த ஊடக விவரிப்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சை சர்மா கிஷான் லால், சட்டத்துறை விரிவுரையாளர் திருமதி சுபாசினி ருமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இதன் போது, சட்டத்துறைத் தலைவர் திருமதி கோசலை மதன் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு பற்றி விளக்கமளித்தார். அதன் விவரம் வருமாறு:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை, இந்தியாவின் புகழ் பூத்த சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் ‘முறை செய்’ என்ற தலைப்பில் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

இம்மாநாடானது யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது.

மாற்றத்திற்கான கருவியாக சட்டம் என்னும் சாரப்பட
செயற்படல், நிலைமாற்றம், நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன பிரதம விருந்தினராகவும், தகவல் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான ஹிஷாலீ பின்டோ ஜெயவர்த்தன சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

முதல் நாள் நிகழ்வில் ஆளுகை நிலைமாற்றம் தொடர்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டியான் ஷாவும், இலத்திரனியல் நிலைமாற்றம் தொடர்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி சுனில் அபேரட்னவும் திறப்புரைகளை ஆற்றவுள்ளனர்.

முதல் நாள் நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக மக்களின் அரசியலமைப்பு, அதன் எதிர்காலம் என்னும் தலைப்பிலான சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது. அந்தக் கலந்துரையாடலில் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீட முன்னாள் பேராசிரியர் வீ.த.தமிழ்மாறன், ஜனாதிபதி சட்டத்தரணி ஜெயந்தா டி அல்மெய்டா குணரட்ண, பேராதனைப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி கலன சேனாரட்ண ஆகியோர் உரையாளர்களாகவும் மாற்றுக் கொள்கை நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் பவானி பொன் சேகா உரையாளர் மற்றும் நெறியாளராகவும் பங்கு கொள்ளவுள்ளனர்.

இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டீ சில்வா பிரதம விருந்தினராகவும், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்ட நிலையியற் குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சமந்தா உனம்பூவே சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும், கலாசார நிலைமாற்றம் தொடர்பாக சமத்துவத்திற்கும் நீதிக்குமான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷாமலா கோமஸ்ம், முறையியல் நிலைமாற்றம் தொடர்பில் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் நாகநாதன் செல்வக்குமரனும் சிறப்புரைகளை ஆற்றவுள்ளனர்.

அவ்வாறே நிலைமாற்றம், சவால்களும் வாய்ப்புக்களும் என்னும் தொனிப்பொருளிலான விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது. கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் பேராசிரியர் வீ.த.தமிழ்மாறன் , கொழும்புப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி. முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன், சட்டத்தரணி சந்துணி ஆகியோர் வளவாளர்களாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி மகேந்திரன் திருவரங்கன் நெறியாளராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அதேநேரம், இலங்கை மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுச் சுருக்கங்கள் பொருளாதார வளர்ச்சியும் முதலீடும், சுற்றுச்சூழல் சவால்கள், உரிமைகள், நீதி, குடும்பச் சட்டமும் பாரபட்சமும், செயற்கை நுண்ணறிவும் தொழிநுட்பமும், புதிய எண்ணக்கருக்கள் என்னும் 7 தலைப்புக்களின் கீழ் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இவ்வருட மாநாட்டின் புதிய முயற்சியாக யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் சிலர் முறையான ஆய்வு மேற்பார்வைக்குட்பட்ட தமது ஆய்வுக் கட்டுரைகளை முதல் நாள் மாலை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மாநாட்டின் மற்றொரு அங்கமாக மாற்றுப் பிணக்குத் தீர்வு முறைகள் பற்றிய குறிப்பாக மத்தியஸ்தம் தொடர்பான சிறப்பு அமர்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வானது தை மாதம் 24ம் திகதி பிற்பகல் 4 .30 மணி முதல் 6.30 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் இந்தியாவைச் சேரந்த நிபுணர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் கனதியானதும் காலப் பொருத்தம் வாய்ந்ததுமானது ஆகும். எனவே சர்வதேச சட்ட மாநாட்டில் ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றி பயன்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Thinakaran
412 724.1K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! 1 day ago
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 3 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 4 days ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

      போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

      by Mathavi
      June 1, 2025
      0

      வெயங்கொட பொலிஸ் பிரிவின் புஞ்சி நைவலவத்த பகுதியில் நேற்று (31) 03 கிலோ 655 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது ​​போதைப்பொருள்...

      மஸ்கெலியாவில் இரத்ததான முகாம்.!

      மஸ்கெலியாவில் இரத்ததான முகாம்.!

      by Mathavi
      June 1, 2025
      0

      மஸ்கெலியாவில் இரத்ததான முகாம் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வை மஸ்கெலியா இளைஞர் கழகம் ஏற்பாடு செய்து இருந்தது. நிகழ்வில் மூன்று...

      சுன்னாகத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

      சுன்னாகத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

      by Mathavi
      June 1, 2025
      0

      நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் கஞ்சாவுடன் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது....

      ஊடகவியலாளர்களுக்கான செய்தி அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி செயலமர்வு.!

      ஊடகவியலாளர்களுக்கான செய்தி அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி செயலமர்வு.!

      by Mathavi
      June 1, 2025
      0

      போலியான தகவல்களுக்கு எதிராக செயல்படுதல் வெளிநாட்டு செய்திகளை பயன்படுத்தல் மற்றும் தலையீடு செய்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் உண்மையான மற்றும் சூழல் சார்ந்த தெளிவுபடுத்தலை உருவாக்கும்...

      வவுனியா மாநகர சபைக்கு நான்கு பெண் உறுப்பினர்கள் நியமனம்..!

      வவுனியா மாநகர சபைக்கு நான்கு பெண் உறுப்பினர்கள் நியமனம்..!

      by Thamil
      May 31, 2025
      0

      வவுனியா மாநகரசபையில் மேலதிக ஆசனங்களின் மூலம் நான்கு பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 21 உறுப்பினர்களை கொண்டுள்ள வவுனியா மாநகரசபையில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் 5 பெண்கள்...

      கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு..!

      கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 31, 2025
      0

      கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (31) மாலை இடம்பெற்றுள்ளதாக...

      தொடரும் ஊடக அச்சுறுத்தல் ; நீதி வழங்குவதில் அநுர அரசும் பாராமுகம்..!

      தொடரும் ஊடக அச்சுறுத்தல் ; நீதி வழங்குவதில் அநுர அரசும் பாராமுகம்..!

      by Thamil
      May 31, 2025
      0

      "ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றமைக்கு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கும் விடயத்தில் ஆட்சிகள் மாறினாலும் பாராமுகமாக...

      கல்முனையில் இடம்பெற்ற சேவை நலன் பாராட்டு விழா..!

      கல்முனையில் இடம்பெற்ற சேவை நலன் பாராட்டு விழா..!

      by Thamil
      May 31, 2025
      0

      கல்முனை ஹூதா ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த 15 வருட காலமாக சேவையாற்றிய இரு முஅத்தின்களின் சேவை நலன் பாராட்டு விழா நேற்று (30) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின்...

      நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட் திரிபு..!

      நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட் திரிபு..!

      by Thamil
      May 31, 2025
      0

      ஆசியாவில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு இந்த நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான நிபுணரான...

      Load More
      Next Post
      ரெலிகொம் வயர் மீது முறிந்து விழுந்துள்ள பனை மரம்.!

      ரெலிகொம் வயர் மீது முறிந்து விழுந்துள்ள பனை மரம்.!

      கனமழை காரணமாகப் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு உத்தரவு.!

      கனமழை காரணமாகப் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு உத்தரவு.!

      சிறுபோக உப உணவுப் பயிர்ச்செய்கைக் குழுக் கூட்டம்.!

      சிறுபோக உப உணவுப் பயிர்ச்செய்கைக் குழுக் கூட்டம்.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி