• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 27, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் !

admin by admin
August 30, 2024
in இலங்கை செய்திகள்., நாட்டு நடப்புக்கள்
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் !
Share on FacebookShare on Twitter

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விதித்துரைக்கப்பட்டுள்ள வகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள தத்துவங்கள், மற்றும் பொறுப்புக்களை நடைமுறைப்படுத்தலுக்காக அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவதாக இலங்கை பிரஜைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியளிக்கிறது. வெகுவிரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் திகதியை அறிவிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கை பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தேர்தல்கள் ஆணைக்குழு தனது பொறுப்புக்களை சிறந்த முறையில் செயற்படுத்த தீர்ப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பலத்தை ஆணைக்குழு முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. நீதிமன்றத்தின் தீரப்புக்கமைய சகல தரப்பினரும் செயற்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விதித்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று முன்தினம் புதன்கிழமை கூடியது. இந்த கலந்துரையாடல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு உரிய இலக்கம் SCFR 69 2023 , SCFR 90 / 2023 மற்றும் SCFR 139 \ 2023 இலக்க அடிப்படை உரிமை மனுத் தொடர்பில் 2024.08.22 ஆம் திகதி உயர்நீதிமன்ற ஐவர் அடங்கிய நீதியரசர் குழாம் வழங்கிய தீர்ப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு கௌரவமான முறையில் ஏற்றுக்கொண்டுள்ளது.

வாக்காளர்களின் சட்ட ரீதியிலான அபிலாசைகள், வாக்களிக்கும் உரிமை , அரச நிறுவனங்களின் செயற்பாடுகளினால் ஏற்படக் கூடிய நியாயமான கோட்பாடுகள் மற்றும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி வழங்கள், தொடர்பில் அரச நிறுவனங்களிடம் உள்ள இயைவான அதிகாரங்களை செயற்படுத்துவது தொடர்பில் மீளாய்வு செய்ததன் பின்னர் வழங்கப்பட்டுள்ள மீயுயர்வான நீதிமன்றத்தின் தீர்ப்பாக இந்த தீர்ப்பு கருதப்படுகிறது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தீர்மானிக்கப்பட்டதற்கமைய நடத்தாமை மக்களின் அடிப்படை தொடர்ச்சியான மீறப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளது. ‘ சட்ட நியதிகளுக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு தன்னிச்சையான நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தப்பட்டு , 2023 உள்ளூராட்சி மன்ற தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் விரிவான காரணிகளை குறிப்பிட்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கு திட்டமிடல், ஒருங்கிணைத்தல், வளங்களை வேறுப்படுத்தல், அதற்காக ஏனைய தரப்பினரது ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல், மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நிறைவேற்றுத்துறை உட்பட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தத்துவங்கள், பொறுப்பு மற்றும் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் வெவ்வேறாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான உரிய சட்டம் உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல் வாக்கெடுப்பு கட்டளைச் சட்டம் என்றும், சட்டத்தில் விதித்துரைக்கப்பட்டுள்ள காலவரையறைக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் விசேடமாக அவதானம் செலுத்தியுள்ளது.

பொருளாதார பாதிப்பினால் ஏற்பட்ட நிதி பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போனது என்று குறிப்பிடப்படுவது குறித்து ஆராய்ந்த உயர்நீதிமன்றம் ‘ செலவினங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுப்பது வாக்கெடுப்புக்கான பணிகளை முன்னெடுத்ததன் பின்னராகும். அந்த செயற்பாடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதுடன் தொடர்புடையதல்ல,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கு தேவையான நிதியை பெற நிதியமைச்சரின் அனுமதியை கோரி தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்காத காரணத்தால் தேர்தல் பணிகளை இடைநிறுத்த நேரிட்டது.இதனால் சட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட காலவரைக்குள் தேர்தலை நடத்த முடியாமல் போனது.

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு சார்பாக அழுத்தமான நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு சகல அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டு செயற்படுவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை மற்றும் பொறுப்பு என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

2024.08.22 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விதித்துரைக்கப்பட்டுள்ள வகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள தத்துவங்கள், மற்றும் பொறுப்புக்களை நடைமுறைப்படுத்தலுக்காக அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவதாக இலங்கை பிரஜைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியளிக்கிறது.

இலங்கை பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தேர்தல்கள் ஆணைக்குழு தனது பொறுப்புக்களை சிறந்த முறையில் செயற்படுத்த இந்த தீர்ப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பலத்தை ஆணைக்குழு முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. அதேபோல் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு அமைய சட்டத்தால் விதித்துரைக்கப்பட்டுள்ளதற்கமைய வெகுவிரைவில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் திகதியை அறிவிக்க தீர்மானித்துள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பினை கருத்திற் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு தனது நோக்கத்தை செயற்படுத்திக் கொள்வதற்காக அரசியலமைப்பு மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டளைச் சட்டம் ஊடாக ஆணைக்குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள தத்துவங்கள் மற்றும் பொறுப்புக்கள் செயற்படுத்தப்படும். சகல தரப்பினரும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய செயற்பட வேண்டும்.

Related Posts

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எபிடகடுவ தெரிவு!

by selvan
June 27, 2026
0

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) 2026/27 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மருத்துவ நிபுணர் சந்திக எபிடகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (27)...

காணாமல்போன 25 இலட்சம் டொலர் அரச நிதி எங்கே? – அறிக்கை கோரும் எதிர்க்கட்சித் தலைவர்!

by selvan
June 27, 2026
0

மோசடியான முறையில் காணாமல்போன 25 இலட்சம் அமெரிக்க டொலர் அரச தவணைப் பணம் குறித்து அரசு நாடாளுமன்றத்துக்கு முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்...

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

by selvan
June 27, 2026
0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

நாயை உதைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது!

நாயை உதைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது!

by selvan
June 27, 2026
0

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று(27) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை...

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

சுரேஷ் சலேவுக்கு திடீர் மாரடைப்பு!

by selvan
June 27, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, திடீரென ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சைப்...

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

by selvan
June 27, 2026
0

தர்மமுழக்கம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய அணிகள் மோதும் 9வது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் தர்மபுரம் மத்திய...

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும்  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும்  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

by selvan
June 27, 2026
0

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு   ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில்...

உலக சுகாதார அமைப்பின் சர்வதேச ஒத்துழைப்பு மையமாக
அங்கொடை தொற்று நோய்கள் நிறுவனம் தெரிவு!

by selvan
June 27, 2026
0

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு சர்வதேச அளவில் பெற்றுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்றாக, அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவனம், டெங்கு நோயாளிகள் சம்பந்தமான...

காலிமுகத்திடல் கின்னஸ் நாட்டிய சாதனைக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறு.!

காலிமுகத்திடல் கின்னஸ் நாட்டிய சாதனைக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறு.!

by Mathavi
June 27, 2026
0

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பங்கேற்புடன் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பிரம்மாண்ட பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி குறித்து, ஊடகங்களிலும்...

சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய சிறுவனால் நேர்ந்த விபரீதம்.!

சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய சிறுவனால் நேர்ந்த விபரீதம்.!

by Mathavi
June 27, 2026
0

வீதியில் தரித்து நின்ற சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய 16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மின்சார கம்பம், சமிஞ்சை கம்பம், சைக்கிள், பல கடைகள் என்பன சேதமடைந்துள்ளன....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி