• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

லிந்துலை பிரதேச வைத்தியசாலை அபாய நிலையில்…..

admin by admin
August 28, 2024
in இலங்கை செய்திகள்., மலையக செய்திகள்
0
லிந்துலை பிரதேச வைத்தியசாலை அபாய நிலையில்…..
Share on FacebookShare on Twitter

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய சிகிச்சை காரியாலயம் அமைந்துள்ள பிரதேசம் தற்போது பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு தினங்களாகவே இக்கட்டித்திடத்திற்கு பின்னால் இருக்கும் மலையில் இருந்து கற்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும் இதனால் கட்டிடத்திற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பும் இவ்வாறு கற்கள் சரிந்து விழுந்ததன் காரணமாக குறித்த காரியாலயத்தில் இருந்து தமது சேவைகளை தொடர்வதில் அச்சம் நிலவியதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கு பல தடவைகள் அறிவித்துள்ளதாகவும் பொது சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமது பிரதேசத்தில் 90 ஆயிரம் மக்கள் இருப்பதோடு மாத்திரமல்லாது தமது நிர்வாகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் 72 பாடசாலைகளைச் சேர்ந்த 14000 மாணவர்களும் 600 கர்ப்பிணித் தாய்மாரும் 3000க்கும் மேற்பட்ட 5 வயதிற்கு குறைந்த சிறுவர்களும் வாழ்ந்து வருவதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி திருமதி. ரேஷ்னி துரைராஜ் தெரிவித்தார்.

இவர்களுள் குறிப்பாக தமது சுகாதார வைத்திய காரியாலயத்திற்கு வாராந்தம் சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் கர்ப்பிணி தாய்மார் மற்றும் சிறுவர்கள் வந்து செல்வதோடு மாத்திரமல்லாது பிரதேச மக்களுக்கான சுகாதார சேவைகளை வழங்கும் மத்திய நிலையமாகவே இந்த கட்டிடம் விளங்குகிறது என பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இப்பிரதேசம் NBRO பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கையின் பிரகாரம் குறித்த இடத்தில் அனர்த்தம் இருப்பதன் காரணமாக உடனடியாக அவ்விடத்தை விட்டு பிரிதொரு இடத்திற்கு காரியாலயத்தை கொண்டு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் அறிவித்திருந்தது.

அதற்கு அமைய இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான பழைய கட்டிடம் மற்றும் லெம்லியர் தோட்ட Circuit bangalow ஆகிய கட்டிடங்களை தமக்கு பெற்றுத் தருமாறு இலங்கை மின்சார சபை மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இருப்பினும் குறித்த கட்டிடங்களில் ஒன்று கூட தமக்கு தமது சேவைகளை தொடர்ச்சியாக தடையின்றி கொண்டு செல்வதற்கு வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து லிந்துலை பிரதேச வைத்திய சாலையின் ஒரு பகுதியில் நோயாளிகளுக்கான சிகிச்சைகளை தற்காலிகமாக முன்னெடுப்பதற்கு நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரி அனுமதி வழங்கியிருந்தார் இருப்பினும் பழைய கட்டிடத்திலேயே அலுவலக செயற்பாடுகள் இன்று வரை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இவ்வாறான சூழலில் கடந்த ஒரு தினங்களாக மீண்டும் கற்கள் சரிந்து வந்ததன் காரணமாக தமது சேவைகளை தொடர்ச்சியாக அங்கிருந்து முன்னெடுப்பதில் பாரிய அச்சுறுத்தல் மற்றும் உயிராபத்து இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரி விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் லிந்துலை பொது சுகாதார வைத்திய நிலையமமானது தற்காலிகமாக லிந்துலை பிரதேச வைத்திய சாலையில் தொடர்ச்சியாக இயங்குவதற்கான அனுமதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

குறித்த நிலையத்தை நிரந்தரமாக வேறொரு இடத்திற்கு துரித கதியில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை குறித்து அதிகாரி முன்னெடுப்பதாகவும் அதுவரை தற்காலிகமாக மக்களுக்கான சேவைகளை பிரதேச வைத்தியசாலையில் இருந்து வழங்குமாறு அறிவித்துள்ளார்.

குறித்த பொது சுகாதார வைத்திய நிலையத்திற்கான கட்டிடம் நிரந்தரமாக கிடைக்கும் பட்சத்தில் அதனை முன் கொண்டு நடத்துவதற்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குமாக அரசாங்கத்தினால் ஒரு தெகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

எனவே குறித்த நிலையத்திற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள லெம்லியர் தோட்ட தேயிலல தொழிற்சாலையை அல்லது வோல்ட் ரீம் தோட்ட முகாமையாளர் விடுதியை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related Posts

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கோடாவுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 14, 2026
0

மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பகஹவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை (13) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்...

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

by Mathavi
June 14, 2026
0

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையின் சுகாதாரமான சூழலை உறுதி செய்யும் நோக்கில், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் நேற்று (13) மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது....

2029 இல் நாமலே ஜனாதிபதி.!

2029 இல் நாமலே ஜனாதிபதி.!

by Mathavi
June 14, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்டுள்ளார் என்றும், அவ்வாறு தன் இனத்தை நேசிக்கும் ஒருவராலேயே ஏனைய இனங்களையும் ஆதரிக்க முடியும்...

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு.!

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு.!

by Mathavi
June 14, 2026
0

புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர் தகவல்...

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை விதித்தாலும் எதிரொலிக்க மாட்டோம்.!

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை விதித்தாலும் எதிரொலிக்க மாட்டோம்.!

by Mathavi
June 14, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...

பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா? – ரெலோவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி.!

பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா? – ரெலோவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி.!

by Mathavi
June 14, 2026
0

ரெலோ (தமிழீழ விடுதலை இயக்கம்) அமைப்பின் தலைமைக்கு எதிராகப் பல மூத்த போராளிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், கட்சியின் தேசிய...

பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு.!

பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு.!

by Mathavi
June 14, 2026
0

மாவத்தகம, பரகஹதெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது...

புதையல் தோண்டிய மூவர் கைது.!

தொலைத்தொடர்பு கோபுர கேபிள்களை திருடிய சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
June 14, 2026
0

ராகம பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை திருடிய சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய ரத்துபஸ்வல மற்றும்...

கைகளைக் கழுவிக்கொண்டு உத்தமர்களாக வர நாங்கள் விடவே மாட்டோம்.!

கைகளைக் கழுவிக்கொண்டு உத்தமர்களாக வர நாங்கள் விடவே மாட்டோம்.!

by Mathavi
June 14, 2026
0

கடந்த காலங்களில் மனித உயிர்களை அழித்து, தங்களது கைகளை இரத்தத்தால் நனைத்துக் கொண்ட கொலையாளிகளும் ஊழல்வாதிகளும், மீண்டும் தங்களைக் கழுவிக்கொண்டு சமூகத்தின் முன்னால் உத்தமர்களைப் போல் வலம்...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள்; ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 14, 2026
0

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்துருகிரிய - கொடகம வீதியின் பனாகொட பகுதியில் பாதையைக் கடக்க முயன்ற நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி