விசுவமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

0

விசுவமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை இன்று (02.02.2014) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசுவமடு பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட விஷேட அதிரடி படையினர் 21கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞனை கைது செய்து புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் விசுவமடு- ரெட்பானா பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
-பாலநாதன் சதீஸ்-

Leave A Reply

Your email address will not be published.