இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
வவுனியாவில் சுதந்திரதின நிகழ்வின் போது, மாணவர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 4 பேர் திடீரென மயங்கியுள்ளனர். அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழா வவுனியா மாவட்டத்தில் நேற்றுக் காலை நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் மயங்கி வீழ்ந்துள்ளனர்.
அணிவகுப்பில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள், சிவில் பாதுகாப்புப் படையினர், பொலிஸார் அணி வகுப்பு நிறைவடைந்த பின்னர் பிரதான நிகழ்வு மண்டபத்துக்கு முன்பாக உள்ள மைதானத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த மாணவர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒரு மணி நேரமாக மைதானத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், 2 மாணவர்களும் 2 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் மயங்கி விழுந்துள்ளனர். உணவு ஒவ்வாமையே அவர்களின் மயக்கத்துக்கு காரணமெனச் சொல்லப்படுகின்றது.